Friday 7 September 2012

நல்ல நண்பன்



தடுமாறும் போது
இடம் கொடுக்க வேண்டும்;
தடம்மாறும் போது;

தலையில் தட்டவேண்டும்;
கசப்பானாலும்
மெய் உரைக்கவேண்டும்;
இனிக்கும் என்றாலும்
பொய் தவிர்க்கவேண்டும்;
வழுக்கும் போது
கரம் கொடுக்கவேண்டும்;
உள்ளம் அழுக்காகும் போது
காரம் காட்டவேண்டும்!

No comments:

Post a Comment

Thank You...