
தட்டப்படுகிறது கதவுகள் அல்ல
எனது இதயம்
கைகளால் அல்ல
பெரும் கடப்பாறையினால்.
திறக்கப்பட்டது கதவுகள் அல்ல..
என் இதய நாளங்கள்.
அடிக்கடி நான் இப்படி ஆகிரமிக்கப் படுகிறேன்.
அருகதை அற்ற சில மானிடத்தால்,,
பொறுத்துக் கொள்ள நினைக்கின்ற போதெல்லாம்
வருத்தப்படுகிறது எனது மனது.
ஏன் எனில்
கருத்து வேறுபாடுகளோடு சேர்ந்த கைகலப்பினால்.....
திருத்த முற்படும் போதெல்லாம்
திணறிக் கொள்கின்றேன்
பொருத்தமற்ற போக்குகளினால்......



மனிதனிடையே தோன்றும் ஓர் மகத்தான அம்சம் காதல். அந்தக் காதல் சிலவேளைகளில் எம் சிந்தனைகளை சிதறடித்துவிடும். ஏனெனில் மனித மனங்கள் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அங்கலாய்ப்புக்கள் நிறைந்த அசிங்கமான ஒன்று. உணக்கு நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். நீயோ இன்னொருவனுக்கு நானன்று வாழ்ந்து கொண்டிருப்பாய். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எங்கோ முட்டி மோதிக்கொண்டிருப்பேன். நீ கைதட்டி கேலி செய்வாய். ஏனெனில் உனது வாழ்க்கை முறை. சமூக மாற்றம், புதிய சந்திப்புக்கள், என்னில் இருந்து உன்னை எங்கோ இழுத்துச் செல்லும். எனது மனத்திடையே நீ, உணக்கிடையில் நான், என்பதெல்லாம் வெறும் கனவு. ஏனெனில் கால ஓட்டத்தில் குளிப்பவள் நீ.நானோ கடந்து வந்த பாதையை நினைப்பவன். எப்படி எம்மால் இன்னுமொரு புதுப்பிறப்பு?? சிந்திக்கிறேன் சிரிப்புடன் நான்.........



