Friday, 13 April 2012

வெற்றிதானா?






ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியா?

சுவரொட்டிகளுக்குத் தமிழ்க் கலாசாரத்தில் தனியொரு இடம் உண்டு. அதாவது அரசியல் கலாசாரத்தில். தற்புகழ்ச்சி, தன்னைத்தானே வியந்துகொள்ளும் ‘நார்சிசம்’ பேனைப் பெருமாளுக்கும் மிகைப்படுத்தல் இவையெல்லாம் இடம் பெறாத அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை தமிழகச் சுவர்கள் இதுவரையில் கண்டதில்லை.

கடந்த வாரம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இந்திய அரசை வற்புறுத்தி வெற்றி கண்ட திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்து திமுக இளைஞர் அணியால் ஒட்டப்பட்ட ஓரு நீண்ட சுவரொட்டி நகரில் ஆங்காங்கே காணப்பட்டது. தான் தொடர்ந்து பிரதமருக்கு எழுதிய கடிதங்களின் காரணமாகத்தான் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்ற ரீதியில் ஜெயலலிதா அறிக்கை விட்டதும் ‘அம்மா’வை வாழ்த்தி சுவரொட்டிகளும் ஃபிளக்ஸ் போர்டுகளும் முளைத்தன.

உண்மையிலேயே இது வெற்றிதானா? இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்களுக்கு நன்மை கிடைக்குமா? இலங்கையைக் குறித்த இந்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இனியாவது இலங்கை திருந்துமா?

உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு நடந்தவற்றைக் கூர்ந்து ஆராய்பவர்களுக்கு ஓர் உண்மை புலனாகும். அது இந்தியா, இலங்கை தன் பொறுப்புகளிலிருந்து நழுவிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறதே தவிர இலங்கையை நிர்பந்திக்கும் நிலையை ஏற்படுத்திவிடவில்லை.

இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த ‘போரிலிருந்து பாடம் கற்றல் மற்றும் நல்லிணக்கக் குழு’வின் (LLRC) பரிந்துரைகள் எவ்விதம் அமலாகிறது என்பதை இலங்கை அரசின் ஆலோசனையோடும் சம்மதத்தோடும்தான் ஐநா மேற்பார்வையிட முடியும் என்கிறது இந்தத் தீர்மானத்தின் மூன்றாவது பிரிவு. இதில் இலங்கை அரசின் ஆலோசனையோடும் சம்மதத்தோடும் என்கிற திருத்தம் இந்தியா சொல்லிய யோசனை.

இலங்கை சில பரிந்துரைகளை மேம்போக்காக அமல்படுத்திவிட்டு எல்லாவற்றையும் சரி செய்து விட்டோம் என்று சொன்னால் அது சொல்வது சரிதானா என்பதை உலக நாடுகள் எளிதில் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிந்து விடமுடியாது. அப்படி ஆராய்வதற்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். சம்மதிக்குமா?

போர் முடிந்த பின்பு மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்களை விசாரிக்க ஐநா அவையின் பொதுச் செயலாளர் மூவர் குழு ஒன்றை அமைத்தார். ஐநாவின் பொதுச் செயலாளரே நியமித்திருந்தாலும் அது அதிகாரபூர்வமான குழு அல்ல. அந்தக் குழு அமைக்கப்பட்டபோதே இலங்கை கடும் ஆட்சேபம் தெரிவித்தது.கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தின்முன் ராஜபக்ஷே அரசில் உள்ள அமைச்சர் ஒருவரே ஆர்ப்பாட்டம் நடத்தினார், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது நடந்த சம்பவங்களைக் கண்ட ஐநா அந்தக் குழுவின் அறிக்கையை கொழும்பில் வெளியிடும்முன் தனது பணியாளர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தியது. நிலைமை அந்த அளவு மோசமாக இருந்தது. அறிக்கை கடந்த மார்ச் மாதமே தயாராகிவிட்ட போதும் அதை உடனே வெளியிடாமல், சிங்கள-தமிழ்ப் புத்தாண்டுகள் வந்த ஏப்ரல் மாதத்தில் அதை வெளியிட்டது. அந்த அறிக்கையைக் கடுமையாகச் சாடி இலங்கை வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இப்போதும் இந்த அறிக்கையை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமானது எனச் சொல்லி முழுமனதோடு ஏற்கவில்லை. அது எப்படி பரிந்துரைகளின் அமலாக்கத்தை மேற்பார்வையிட சம்மதிக்கும்?

இந்தியா செய்த இன்னொரு திருத்தம் பரிந்துரைகளை அமல் செய்ய ஐநா அளிக்கும் உதவிகளை மதித்து ஏற்க வேண்டும் (respect the assistance) என்ற வார்த்தையை நீக்கியது.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதற்கு ஆதரவாகத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. திராவிடக் கட்சிகள் கொண்டாடுவதற்குரிய ‘வெற்றிதானா’ இது?

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று இந்தியா நடந்துகொண்டதை மார்ச் 19ம் தேதி ராஜபக்ஷேவிற்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கே குறிப்பிடுகிறார், ‘கட்டாயமாக ஏற்க வேண்டும், கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று மேலை நாடுகள் வற்புறுத்துவது நமக்கென எப்போதுமே பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இந்தியா அதை நீக்கும் வகையில் தீர்மானத்தின் மொழி நடை மாற்றப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தியது. அது மாற்றப்பட்டதும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்’ என்று பிரதமர் எழுதுகிறார்.

"இப்போது நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை மனப் பூர்வமாக கொண்டாடமுடியாது. காரணம், அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை உன்னிப்பாக படித்துப் பார்த்தால் பெருத்தஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அதிலும் கடைசிநேரத்தில், காலத்தின் கட்டாயத்தால் இந்தியா இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதுவும் அந்த நாட்டின் அனுமதியோடு விசாரணையை மேற்கொள்ளலாம் என்பது போன்ற சூழ்ச்சியான, இலங்கைக்கு ஆதரவான சில திருத்தங்களோடு அதற்கு ஒப்புதல் அளித்திருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார் ஈழப் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரித்து வரும் கவிஞர்  தாமரை.

ஆனால் இதுவரை இந்தியா பின்பற்றி வந்த இலங்கை தொடர்பான நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறார் பேராசிரியர் வி.சூரியநாராயணன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்வி மையத்தின் முன்னாள் இயக்குநரான இவர், இலங்கை தொடர்பான விஷயங்களில் வல்லுநர்.

"2009ல் ஐநா மனித உரிமை கவுன்சில்முன்,இலங்கை மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டிருக்கிறது என இதே போல், இலங்கையைக் கடிந்துகொள்ளும் ஒரு தீர்மானம் வந்தது. அப்போது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளோடு இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து தீர்மானத்தைத் தோற்கடித்தது. அது மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததற்காக இலங்கையைப் பாராட்டும் ஒரு தீர்மானமும் இந்தியாவின் ஆதரவோடு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஒரு தேசத்தைக் குறிப்பிட்டுக் குறை சொல்லும் வகையில் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானங்கள் கொண்டு வருவதை அப்போது இந்தியா எதிர்த்தது. இப்போது ஒரு தேசத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது" என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த மாற்றத்திற்குத் தமிழக அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றமும் ஒரு காரணம் எனப் பேராசிரியர் சூரியநாராயணன் கருதுகிறார். "இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வகைசெய்யும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்" என்கிறார் அவர். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண திஸ்ஸ விதரணக் குழு அளித்த அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்திருப்பதும் இலங்கை அரசு உண்மையாக ஒரு தீர்வை விரும்புகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அதுதான் அடிப்படையான கேள்வி. எந்த ஒரு தீர்வையும் தட்டிக் கழிக்கவே விரும்பும் இலங்கை அரசு எப்படி ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தைச் செயல்படுத்த முன் வரும்? அப்படி அது முன்வராத பட்சத்தில் அதை வற்புறுத்த இந்தத் தீர்மானத்தில் ஏதாவது வழி வகை செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் ஏதுமில்லை.

இத்தனைக்கும் நடுவில் கிடைத்திருக்கும் ஒரே ஓர் ஆறுதல், இலங்கை அரசு அமைத்த LLRCயின் அறிக்கை. ‘சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட புகார்களைக் கண்டுகொள்ளவில்லை’ என்ற ஒரு வரி. சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இந்த வரி உதவலாம்.

இப்போதைக்கு, இந்தியா தனக்கு எதிராக வாக்களித்ததைக் கண்டு இலங்கை கொதித்துப் போயிருக்கிறது. "விரும்பத் தகாத விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என இலங்கை அரசியல்வாதிகள் பேசத் துவங்கியிருக்கிறார்கள், காஷ்மீர் பிரச்சினையை முன்வைத்து இந்தியாவைச் சந்திக்கு இழுக்க வேண்டும் எனக் கறுவிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் தன்னுடைய தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டதால் அமெரிக்கா, இந்தியா குறித்து ஏமாற்றமடைந்திருக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி.

அண்ணா பல்கலைக்கழகத்தில் MSc வீட்டிலிருந்தே படிக்கலாம்!



அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு புதிதாகத் தொடங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளவும் இந்த ஆன்லைன் படிப்பு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது

கவல் தொழில் நுட்பத் துறை வளர்ந்து வரும் முக்கியத் துறை. எனவே, இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவேதான், இது தொடர்பான படிப்புகளில் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் இருந்து வருகிறது. தற்போது, கம்ப்யூட்டர் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, இது தொடர்பான தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களும் அதுதொடர்பான புதிய தொழில்நுட்பங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் குறித்து அறிந்த தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்ற புதிய  முதுநிலைப் பட்டப் படிப்பைத் தொடங்கியுள்ளது. இது இரண்டு ஆண்டு படிப்பு. “அறிவியல், என்ஜினீயரிங் படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ளவும், ஐ.டி. பணிகளில் வேலைகளில் இருப்பவர்கள் தங்களது தொழில்நுட்பத் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் உதவும் வகையில் இந்த ஆன்லைன் படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது” என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர்.

“இந்தியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேருக்காக முதுநிலைப் பட்டப் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதன் முறை. அதுவும் ஆன்லைன் முறையில் முதன் முறையாக நடத்தப்படுகிறது” என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்குநர் பேராசிரியர் எம். மதுசூதனன். அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் - கேபிசி ஆராய்ச்சி மையம், இந்த ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்கிறது. “ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், அத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், இந்தத் துறையில் தகுதி படைத்த திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சி-டாக், அறிவியல் தொழில்நுட்பத் துறை போன்ற அமைப்புகளுடன் இணைந்து கேபிசி ஆராய்ச்சி மையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தப் புதிய படிப்பைக் கொண்டு வருவதிலும் கேபிசி ஆராய்ச்சி மையம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்க முடியும் என்பதுதான் இந்தப் படிப்பின் முக்கிய அம்சம்” என்கிறார் கேபிசி ஆராய்ச்சி மைய புரோகிராம் டைரக்டர் பேராசிரியர் சி.என். கிருஷ்ணன்.

வழக்கமான தொலைநிலைப் படிப்புகளைவிட இந்தப் படிப்பு எந்த வகையில் சிறப்பானது?

வாரத்தில் இருமுறை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் துறை சார்ந்த பேராசிரியர்களும் நிபுணர்களும் வகுப்புகள் எடுப்பதை ஆன்லைன் மூலம் கேட்டு கற்க முடியும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் கேட்டுத் தெளிவு பெறலாம் அல்லது இ-மெயில், சாட்டிங் மூலம் தொடர்புகொண்டு விளக்கம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படிப்பை மாணவர்களுக்கு ஆர்வமிக்கதாக்கும் வகையில் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஸ்லைடுகள், ஆடியோ, வீடியோ பாடங்கள் வழங்கப்படுகின்றன. அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து தரம் வாய்ந்த சில புத்தகங்களை வாங்கிப் படிக்கும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். செய்முறைக்கும் புராஜக்ட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் தொழில்துறைப் பணிகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தயாராக வாய்ப்பு ஏற்படும்.

இந்தப் படிப்பு நடைமுறைகள் எப்படி இருக்கும்?

ஆன்லைன் மூலம் படிப்பு என்றாலும்கூட, மாணவர்கள் இரண்டு முறை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டியதிருக்கும். அதாவது அட்மிஷனின் போது, சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக நேரில் வர வேண்டியதிருக்கும். இறுதி செமஸ்ட்ரில் புராஜக்ட் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டுவதற்காக வர வேண்டியதிருக்கும். மாணவர்கள் இந்தப் படிப்பை இரண்டு ஆண்டுகளில் நான்கு செமஸ்டர்களில் முடிக்க வேண்டும். அதேசமயம், மாணவர்கள் விரும்பினால் மேலும் கால அவகாசம் எடுத்துக்கொண்டு படிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது 6 ஆண்டுகளுக்குள் (12 செமஸ்டர்கள் வரை) இந்தப் படிப்பை முடிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள், குறிப்பிட்ட செமஸ்டரில் படிக்க விரும்பவில்லை அல்லது அதற்குப் போதிய அவகாசம் இல்லை என்றால் அந்த செமஸ்டரில் படிப்பிலிருந்து விலகிக்கொண்டு அடுத்த செமஸ்ட்ரில் படிக்கலாம். வேலையில் இருந்துகொண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் காமிராவுடன் கூடிய லேப் டாப் அல்லது டெஸ்க் டாப் வைத்திருக்க வேண்டும். அதற்கு இன்டர்நெட் வசதியும் தேவை. இதன் மூலம், ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்களைக் கேட்டு, தங்களது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற முடியும். இந்தப் படிப்புக்குத் தேவையான ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்களை மாணவர்களின் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்வதில் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையம் தேவையான உதவிகளை வழங்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பாக மாலை நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். 60 நிமிடங்களிலிருந்து 90 நிமிடங்கள் வரை ஒரு வகுப்பு இருக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 25 வகுப்புகளிலிருந்து 30 வகுப்புகள் வரை இருக்கும். இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு 50 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும். தியரி வகுப்புகளுடன் செயல் முறை விளக்க வகுப்புகளும் நடத்தப்படும். இதுதவிர வகுப்பறைத் தேர்வுகள், அசைன்மெண்ட்டுகள் போன்றவற்றின் அடிப்படையில் அகமதிப்பீடும் இருக்கும். மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்படும் நேரங்களில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கவனிக்கிறார்களா என்பதும் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் எழுத்துத் தேர்வுகளை தேர்வு மையங்களில் எழுத வேண்டியதிருக்கும். பாடத்திட்டங்கள், இந்தப் படிப்பு குறித்த விரிவான விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் படிப்பில் யார் சேரலாம்?

பிசிஏ அல்லது  அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளில் பிஎஸ்சி பட்ட மாணவர்கள் இந்த முதுநிலைப் படிப்பில் சேரலாம். ஆனால் அவர்கள் கணிதத்தை ஒரு பாடமாகவாவது எடுத்துப் படித்திருக்க வேண்டும். என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்பு என்பதால் வேலையில் இருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். பிசிஏ, பிஎஸ்சி படித்துவிட்டு சாப்ட்வேர் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள இந்தப் படிப்பு உதவியாக இருக்கும். அதற்காகப் பணியை விட்டு விட்டோ அல்லது விடுமுறை எடுத்துக்கொண்@டா இந்தப் படிப்பைப் படிக்க வேண்டியதில்லை. சாப்ட்வேர் அல்லது ஐடி அல்லாத வேறு துறைகளில் என்ஜினீயரிங் படிப்புகளைப் படித்துவிட்டு, சாப்ட்வேர் மற்றும் ஐடி துறைகளில் வேலை செய்ய விரும்பும் மாணவர்கள் தங்களது தொழில்நுட்பத் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான களமாக இந்தப் படிப்பு அமையும். இதுவரை வேலை கிடைக்காத என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இந்தப் படிப்பின் மூலம் தங்களது வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.

கட்டணம் எவ்வளவு?

இந்த ஆன்லைன் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் செமஸ்ட்டர் கட்டணம் ரூ.29,500. பிற மாநில மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆயிரம். இரண்டாவது செமஸ்டரிலிருந்து கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் செய்து அதனைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.  விண்ணப்பத்துடன் மாணவர்களின் கையொப்பத்துடன் கூடிய புகைப்படம் ஒட்டப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100.  The Director, Centre for Distance Education, Anna university, Chennai - 600 025’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 9ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களுக்கு:

http://www.mscfoss.au-kbc.org.in
http://www.annuniv.ecu/cde

Sunday, 8 April 2012

தென்றல் வந்து தீண்டும் போது...



இப்போ கொஞ்ச நாளா தான் இவங்களப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். மரபிசைத் தமிழோட மொத்த சுவையும் தளும்ப தளும்ப ... இவங்களும் நம்ம சக பயணின்னு நெனைக்கிறப்போ ரொம்ப பெருமையா இருக்குங்க. பெண்ணீயம், பதிவரசியல் இதையெல்லாம் கலக்காம தமிழ்....தமிழ் மட்டுமே வாசிக்கத் தருகிற அற்புதமான படைப்பாளி - கவிஞர். ஒவ்வொரு கவியும் பொருள் புரிய அத்தனை நேரம் பிடித்தது எனக்கு. எல்லாமே நல்லாயிருந்தாலும் என்னைப் பத்தி(?) இவங்க எழுதின இந்த கவிதை ரொம்ப பிடிச்சதுங்க.
மீன் = கயல். அதனால .....

மீன்

கடல் கொழிக்கும் நீரின் இனத்தில்
வளையும் வாளில் தண்மை இல்லா
கொதிக்கும் புனலாய் புள் மறையும்
கொத்தும் அலகில் குதித்து கீறும்


வாய் அகலும் மச்சத்தின் உள்புகும்
சிற்சில்லுயிரின் சிறை இரையாய்
வலை காணா வலிகாண் வல்லினம்
கடிமரத்தின் திசை போகா கலத்தில்


கெளிற்றின் கொள்வாய் கௌவை
அலை ஆழம் பாசிக்குள் முகிழும்
தூண்டில் வழுவி சிற்றலை தழுவும்
ஒற்றை புற்றில் ஓர் நிலை அறியா


கற்றலையின் சிறுகண் தப்பும் அவ்விலை
தூங்கா திரையில் கலக்கும் பொழுது
வாட்டும் ஒளிக்கீற்று கூசித் தேடும்
கள்ளூறா பாறை இடுங்கில் பெருக


என்பின் முள்ளாய் துருத்தும்
தசையில் உணவாய் கரைய
நசையற்று நவிலும் ஓசை
உப்பில் ஊறும் ஒரு சுவை.


துள்ளும் வாலில் கெண்டை சிக்க
தளரா பாய்ச்சலில் கழுகும் கொத்த
தீரா பகை தீரும் கண்ணியில்
வாழா வினை பகருமோ மீன்.


- 'Writer' Mubeen Sadhika

கேட்டதில் பிடித்தது

எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி தான் எனக்கும் இசைஞானிய பிடிக்கும்.ஆனா இந்த பாட்டை கேக்கும் போது ஏனோ அவரை ரொம்ப... ரொம்பப் பிடிக்கும்.




பார்த்ததில் பிடித்தது

ஊரிலே இருந்து தோழி வந்திருக்கா. எங்கயாவது போலாம்டீன்னு ஒரே நச்சு. அவள கூட்டிட்டு போய் பாஸ் படம் பார்த்தோம். முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் பார்த்திட்டாலும் நாங்க ரெண்டு பேரும் +  இன்னும் இரண்டு கல்லூரித் தோழிகள் சேர்ந்து பாக்குறதுன்னா... செம காமெடியா இருக்கும். நானெல்லாம் படம் பார்க்கப் போறது அந்தப் பாப்கார்னுக்கும் ஐஸ்கீரீமுக்கும் தான். ஆனா அம்மணி படத்தப் பாத்துட்டு மெசேஜ் ஏதாவது இருக்கான்னு தேடுற ஆளு. ஈரானியப் படங்கள்,அகிரா குரோசவான்னு வாய் ஓயாம பேசும். அவளே படம் முடியிற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தா. நல்ல படம். எந்திரன்? விசில் ஓயட்டும். மெதுவா பாத்துக்கறேன்.

படம் பார்த்திட்டு கடை கடையா சுமாரான விலையில ஒரு புடவை தேடி அலைஞ்சப்போ... கண்ணுல பட்டு ஒட்டிக்கிட்டது இது.

ஆசைக்கு அலைபேசில படம்பிடிச்சிட்டு வந்தாச்சு. பின்ன நெசத்துல வாங்குறதுன்னா Diva க்கு என்னோட மொத்த சொத்தையும்(?) எழுதி வைக்கணும். திருமண வகைகள்ல இருந்திச்சு. நேரிலே இன்னும் அழகாயிருந்திச்சி. என் ஓட்டை மொபைல்லையே இவ்வளோ அழகுன்னா பாத்துக்கோங்க. நாளைக்கு மாம்ஸ் வந்து உனக்கு என்ன வேணும்ன்னு கேப்பாரில்ல அன்னிக்கு இதான் வேணும்ன்னு சொல்லுறதுக்காக. ஒரு தொலைநோக்கு பார்வை தாங்க :)

தடுமாற்றம்


இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது
சகுனம் சரியில்லையென்றாள் ஒருத்தி
சத்துக் குறைவென்றாள் இன்னொருத்தி
’தூங்கினால் தானே’ அலுத்துக் கொண்டாள்
மற்றொருத்தி!
’கண்ணுக்கு மூக்குக் கண்ணாடியிடு’
சிரிப்பலைகள் பரவி ஓய்ந்தன.

தோழிகளின் சீண்டல்களைப் போலவே
நிற்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது
தாழிடாமலும்
முற்றிலும் திறந்திடாமலும்
காற்றில் அல்லாடும் கதவுபோல
இமைகளோடு இடது கண்!

அதே லயத்தில் 
பார்வையில் பருகிய உன்னை
பத்திரப்படுத்தவா வேண்டாமா
பதறிக் கொண்டிருக்கிறது இதயம்

Life is Good

விலக்கப்பட்ட கனியைப் போல
அந்தரத்தில் தொங்குகிறது பூமி.
தேசங்களின் வரைபடங்களின் மீது
கள்ளத்தனமாய் ஊர்கிறது
கரும்புகை சர்ப்பமொன்று.
பச்சைக்கண்கள் மினுமினுக்க
காலத்தைப் போலவே அசையும்
பாம்பின் வயிறு
நூற்றாண்டுக்கால இரை விழுங்கி
புடைத்திருக்கிறது.
சமயங்களில் அதன் தாகம் தணிக்க
கடல் எழுந்துவந்து
நாவை நக்கிச் செல்கிறது.
கொலைவாள் போல
சுற்றிச்சுழலும்
பாம்பின் நாக்கு
சூரியனை விழுங்குவதற்கான எத்தனத்திற்கானது.
இப்போது ஏதேனும் தேச வரைபடத்தை உருவி
நம் நிர்வாணம் மறைக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் இது முதல் பாவமல்ல.

       


நாயகர்களின் வருகை

அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
தெருப்புழுதி பறக்க தேர்கள் விரைகின்றன.
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.
தேர்க்கால்களில் கன்றுகள்
அடிபடுவதுபற்றி கவலையில்லை.
108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை.
கடல் விழுங்கி
வாமனர்களின் நகரங்கள் அழியுமொரு நாளில்
தொடங்கி விட்டன
நகரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை மேசையில்
கிடத்தப்பட்டிருப்பது நீங்களும் நானும்தான்.
இரண்டாம், மூன்றாம், எட்டாம், பதினான்காம்
மன்னர்களின் மகுடங்களை அளவிடும்
வாய்ப்பு வரலாறு அழைக்கிறது.
மகுடங்களின் அளவு ஏறக்குறைய
சவப்பெட்டிகளின் அளவுகளை ஒத்திருப்பது
தற்செயலானது என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
தூரதேசங்களின் கிளர்ச்சி
உங்கள் செவிகளை எட்டாதிருக்கட்டும்.
கண்கள் விறைத்த பிணங்களை முன்னிட்டு
முறையீடு செய்பவர்களின் பக்கம்
உங்கள் கவனம் திரும்பாதிருப்பது இன்னமும் நல்லது.
நேற்று ஆண்குழந்தை பிறந்த
நண்பனின் குறுஞ்செய்தியை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
வரலாறு பள்ளங்களை நிரப்பும்.
அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.

மதியம் புதன், செப்டம்பர் 29, 2010

ஒற்றைத்துளியில் உறையும் கடல்

மாலைக்கும் அதிகாலைக்கும் இடையில்
இரவு ஒரு பறவையைப் போல கடக்கிறது.
அந்த கரியநிறப் பறவை
நம் தலைமீதுதான் பயணிக்கிறது
என்பதை வேண்டுமானால் நாமறியாதிருக்கலாம்.
ஆதிவாசி வனாந்திர மய்யத்தில்
கனன்றெரியும் நெருப்பில் ஒழுகும்
மாம்சத்துளி போலவே
உருகி வழிகிறது காலம்.
ஆம், அவன் வளர்ந்திருக்கிறான்.
முன்பு அவன் ஒரு சொல்லைப் போல இருந்தான்.
இப்போது சொல்லாகியிருக்கிறான்.
ஒரு நாளை நான்காய் எட்டாய் மடித்து
அனாயசமாய்க் கிழித்தெறிகிறான்.
அந்த குதூகலம் நம்மிடமில்லை
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சகல ஆண்களிலும் பெண்களிலும்
குழந்தைமையைப் பறித்த குற்றவுணர்வோடு
அவனருகே மண்டியிடுபவரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
இனி அவரது கோப்பை
அவனது சிறுநீர்ச்சூட்டால் நிரப்பப்படட்டும்.
கடவுள் ஆசிர்வதிக்கப்படட்டும்.

(எதிர்வரும் 30.09.10 அன்று முதல் பிறந்தநாளைச் சந்திக்கவிருக்கும் என் மகன் கத்தார் நவீன்சித்தார்த்திற்கு.)

மதியம் திங்கள், ஜூன் 14, 2010

முகாம்தேசம்



















இரண்டு கவிதைகளை
உன் வலைக்குள் திணிக்க முயன்றாய்.
இப்போது உன் விதைப்பைக்குள்
இரண்டு பறவைகள்.
-----------
அவன் தன் மனைவிக்கு உதவுவதற்காகத்தான்
சமையலறைக்குள் நுழைந்தான்.
அவளை விடவும்
அழகான ஒரு தோசையைச் சுடுவதே
அவனது நோக்கமாயிருந்தது.
முதல் கரண்டி மாவிலேயே
தோசை என்பது
மையத்திலிருந்து விளிம்புக்குப் பரவும் அதிகாரம்
என்பதைக் கண்டுபிடித்தான்.
சில தோசைகள்
பிய்ந்தும் கருகியும் வர ஆரம்பித்தபோது
அவன் தன் கோட்பாடுகளைக் கைவிட்டான்.
ஒரேயொரு தனித்துவமான தோசையை
சுட்டே தீருவதென்ற ஆவலில்
சமையலறையிலிருந்த
மிக்சர், ஜீனி, கடலை மற்றும்
கரப்பான்பூச்சிகளின் செதில்களைத்
தூவத்தொடங்கினான்.
இருந்தபோதிலும் 
தோசையின் எல்லைகளில்
தூவப்படும் எண்ணெய்
சாளரங்களற்ற சமையலறையில்
புழுங்கித் தவிக்கும் மனைவியின்
வியர்வை வாசனையை விடவும்
மேலானதில்லை என்பதை உணர்ந்தபோது
அவன் தன் கைவிரல்களைத்
துண்டாக்கித் தூவினான்.
இப்போது தோசை முழுமையடைந்திருந்தது.
--------------
ஆகச்சிறந்த படைப்புகள் எழுதி
ஆகச்சிறந்த புத்தகங்களாக்கி அவன்
ஆகச்சிறந்த எழுத்தாளர் ஆகியிருந்தான். 
பின்னும் அவன்
ஆகச்சிறந்த மனிதர்கள் மீது
ஆகச்சிறந்த அவதூறுகளைச் 
சொல்லத் துவங்கினான்.
ஆகச்சிறந்த மரணங்கள் மீது
ஆகச்சிறந்த பொய்களைப்
பரப்பவும் செய்தான்.
ஆகச்சிறந்த வாசகர்கள் அவனுக்கு
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினர்.
அல்லது ஆகச்சிறந்த வாசகர்களைப் போல
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினான்.
ஏற்கனவே தோல்வியின்
புழுக்கத்திலிருந்த கடவுள் அவனுக்கு
ஆகச்சிறந்த ஆசிர்வாதங்களை அனுப்பியிருந்தார்.
பூமிக்குத் தாமதாய் வந்த
கடவுளின் ஆசிர்வாதங்கள்
ஒரு அழகிய பழத்தின் வாசனையைப் போலிருந்தது.
கடவுள் விட்டதிலேயே
ஆகச்சிறந்த குசு இதுதான் என்று சொல்லிக்கொண்டான்.
--------------
ஒரு தேசத்தின் வரைபடத்தை
வரைவதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள்.
முதலில் மலைகளையும் காடுகளையும்
நதிகளையும் வரைபடத்த்லிருந்து
நீக்கிவிடுவதென்று தீர்மானித்திருந்தனர்.
அவை இப்போது 
அயல்தேச நிறுவனங்களின் உடைமைகளாயிருந்தன.
பின்னுமிருந்த விலங்குகளிலும் மனிதர்களிலும்
விலங்குகளை மருந்துகளின் உற்பத்திக்காகவும்
மனிதர்களை மருந்துகளின் விற்பனைக்காகவும்
ஒதுக்கிவைத்தனர்.
ஆட்சியாளர்கள், போலீஸ்வீரர்கள், ராணுவத்தியாகிகளை
எந்த வகையினத்தில் சேர்ப்பதென்ற 
குழப்பம் நீடித்தது. 
அதற்குள் அண்டைநாட்டொன்றின் 
வரைபடம் புகழ்பெற்றிருந்தது.
இனிவரும் தேசங்களின்
வரைபட மாதிரி அதுவே என புகழப்பட்டது.
அது முதலில் ஒரு
சதுரங்கப்பலகையைப் போலிருந்தது.
ஒரு துப்பாக்கி வைத்தால்
பல மரணங்கள் விளைந்தன.
ஒரு பேச்சுவார்த்தை வைத்தால்
பல கூடாரங்கள் முளைத்தன.
ஒரு பதுங்குகுழி வெட்டினால்
சதுரங்கப்பலகையிலிருந்து
குண்டுகளைப் பொழிந்தபடி
விமானங்கள் பறந்தன.
முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள்
இருதரப்பிலும் வெட்டும் காயகளாகப் பயனாகினர்.
இறுதியில் சதுரங்கப்பலகை
முகாம்களின் வடிவத்தில் மாறியது. 
முகாம்களைப் போல் தேசத்தின் 
வரைபடத்தை அமைப்பதென்றும்
தேசத்தை முகாம்களைப் போல்
அமைப்பதென்றும் அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

   நன்றி : லும்பினி

மதியம் சனி, பிப்ரவரி 13, 2010

முலைகளின் ஆல்பம்















பேருந்து படிக்கட்டு விளிம்பில்
நின்றுகொண்டிருந்த நான்
சடாரென்று கோணம் மாற்றினேன்
எனக்கும் மேலே
கைதூக்கி நின்ற பெண்களின்
மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே
மணமாகித் தாய்வீடு வந்திருந்த
எதிர்வீட்டுப்பெண்ணின்
மார்பு ரசித்தேன்
மாசமாயிருப்பாளோ என்னும்
உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட
கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய
கொழுத்த முலைகள்
இன்றைய இரவை
ஈரப்படுத்தக்கூடும்.
திரைகளெங்கும் நாயகிகள்
முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்
சரிசெய்துகொள்வது வேறு
நம் கனவுகளின் பரப்பை
அகலப்படுத்துகின்றன.
மார்புகள் இல்லாது போனால்
எல்லாப் பெண்களோடும்
உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்
மார்புகளின் ஸ்பரிசம்
கிளர்ச்சியூட்டும் வேளையில்.
இப்படி எண்ணத்தோன்றும்
வெறித்து நோக்கும்
ஆண்களின் கண்களே
முலைக்காம்புகள் ஆயினவோ.

                                                   (நன்றி : கருப்பு 2002)

மதியம் சனி, டிசம்பர் 19, 2009

காமன்மேன்களின் கவனத்திற்கு...













அதுவொரு கொண்டாடப்பட வேண்டிய காதலர்தினம்தான்
பிப்ரவரி 14,1998.
நானும்கூட கல்லூரியின் இரண்டாமாண்டில்
கொண்டாடிக்கொண்டுதானிருந்தேன்.
அதேநாளில்தான்
அயோத்தியிலிருந்து கோவைக்கு
மரணத்தை அழைத்து வந்திருந்தார் அத்வானி.
மரண வெடிப்பில்
சதைத்துணுக்குகள் சிதறிக்கிடந்தன.
குண்டுவெடித்ததாய்க்
கைது செய்யப்பட்டோரில்
22 பேரின் ஆயுள்தண்டனையை
நேற்றுதான் ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
இந்தியாவில் பொதுவாக ஆயுள்தண்டனை 14 ஆண்டுகள்.
22 பேர் சிறையில் இருந்ததோ 11 ஆண்டுகள்.
இழந்துபோன காலத்தை
தலைமுறைக்கு மாற்றப்பட்ட கொலைப்பழியை
இன்னமும் கண்களில் மிச்சமாய்
உறைந்திருக்கும் அவநம்பிக்கையை
யார் சரிப்படுத்தப்போவது
நீங்கள் அல்லது நான்?
உங்களது அல்லது எனது குழந்தை?
அத்வானி அல்லது பாரதமாதா?
மன்னிக்கவும் இது கவிதையாய் வரவில்லை.
நான் கவிதை எழுதவும் வரவில்லை.
அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது.
அவர்களிடம் போலீஸ் இருக்கிறது.
அவர்களிடம் அரசு இருக்கிறது.
அவர்களிடம் செய்திகள் இருக்கின்றன.
மன்னிக்கவும் மீண்டும் மீண்டும்
ஒரே வார்த்தையை உளறிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது.
என்னிடம் என்ன இருக்கிறது?
வார்த்தை...
கவிதையாய்க் கூட மாறமுடியாத வார்த்தை.
நல்லது கனவான்களே.
அந்த 22 பேரையும் வேனில் ஏற்றி
பொட்டல்காட்டில் இறக்கிவிடுங்கள்.
இந்த கவிதை எழுதியதற்காய்
23வதாய் என்னையும்.
ஒருநிமிடம், இந்த கவிதையை
யாரேனும் ஆதரிக்கக்கூடும்.
24வது...
25வது...
................
............
கண்களைக் கட்டி சுடத்துவங்குங்கள்.
இப்போது உங்கள் கவுண்ட் டவுன் தொடங்கட்டும்.
10
9
7
8
6
.
.
.
.

மதியம் திங்கள், டிசம்பர் 14, 2009

கடவுளைக் குதப்புணர்ச்சி செய்துகொண்டிருந்தபோது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகள்

எனக்கு கடவுள் கிடைப்பதற்குள்
சில நூற்றாண்டுகள் ஆகியிருந்தன.
ஏனெனில் கடவுளைப் புணர்வதற்காய்க்
காத்திருப்போர் பட்டியல் நீளமானது.
தெய்வீக லாவகத்தோடு
தன் புட்டங்களை உயர்த்திய கடவுள்
ஒட்டகத்தைப் போலிருந்தார்.
யுகங்களைத் துளைத்து
என் குறி கடவுளின் குதத்தைத் துளைத்தபோது
வலிதாங்காது கடவுளின் கன்னங்களில்
கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
கடவுளை அழவைக்கிறவனே பாக்கியவான்.
ஒரு சிறுகுழந்தையைப் போன்ற
அந்த மெல்லிய விசும்பல்
கடவுளை விட அழகானதும் உண்மையானதும்கூட.
முன்னும் பின்னுமாய் இயங்கி
கடவுள் மீதேறி
புணர்ச்சியின்வழியே நான்
திரேதாயுகத்தைக் கடந்துகொண்டிருந்தபோது
என் அலைபேசி அலறியது.
யூதக்குழந்தைகள், வியட்நாம் பெண்கள்,
ஈராக்யுவதிகள், ஈழத்துக்கொலைநிலம்,
ரத்தம், யோனி, மூர்க்கம், அத்துமீறல்,
நிர்வாணம், பீய்ச்சியடிக்கும் திரவங்கள் என
எம்.எம்.எஸ்கள்
என் புணர்ச்சியின் சமநிலையைக்
குலைத்துப்போட்டன.
கடவுள் பதற்றமடைந்தார்.
அனேகமாய் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட
எம்.எம்.எஸ் வந்தபோதுதான்
பெருவிரலை உயர்த்தி
தன் புட்டத்தை வாகாக கடவுள்தூக்கிக்கொடுத்தார்
என்று நினைக்கிறேன்.
கச்சினப்பள்ளி துடிமூயேயின்
தளர்ந்த மார்பகங்களைப்
பச்சைவேட்டைக் கரங்கள் அரிவதான
எம்.எம்.எஸ் வந்தபோது
என் அலைபேசியை
சைலண்ட் மற்றும் வைப்ரேஷன் மோடிற்கு
மாற்றும் முடிவுக்கு வந்தேன்.
அதற்குள் கடவுளின் குதத்தில்
நூற்றாண்டு சிலந்தி படிந்திருந்தது.
இந்த இடைவெளியில்
ஒபாமாவின் நோபல் குறித்த
குறுந்தகவல்கள் வராது தவறியிருக்கலாம்.
கடவுளின் குதம்விரித்து
கலியுகத்திற்குள் நுழைவதற்குள்
மீண்டும் அலைபேசி
வைப்ரேஷன் மோடிலேயே ஓசை எழுப்பியது.
அந்த ஓசை
முதன்முதல் கேட்ட
கடவுளின் விசும்பலைப் போல இருந்தது.


பச்சைவேட்டை - மத்திய இந்தியாவில் ‘மாவோயிஸ்ட்களை வேட்டையாடுவது’ என்ற பெயரில் பழங்குடி மக்களின் எதிர்ப்புணர்வை ஒழிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை.

துடி மூயே (70) - சட்டீஸ்கரில் உள்ள கச்சான்பள்ளி என்னும் கிராமத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பச்சைவேட்டையின்போது துடிமேயே என்னும் 70 வயது பெண்ணைக் கொன்றது மட்டுமில்லாமல், அவர் பிணமான பிறகு அவரது மார்பகங்களை அறுத்து அகற்றியது பாதுகாப்புப்படை.

கவிஞர். அலெக்ஸ்

விருப்பமான வலைப்பூ
நன்றி : நேசமித்ரன் , வித்யா

பிடித்த வரிகள்......

இந்தச் சிங்கம்
சிங்கத்தை
பலமுறை பார்த்திருக்கிறேன்.

படங்களில்
படக் காட்சிகளில்
வித்தைக் காட்சிகளில்
காட்சிசாலைகளில்
கனவுகளில்

பிடரிமயிரின் தோரனையுடன்
பிளந்த வாயின் கூர்பற்களுடன்
பாய்ச்சலின் பயங்கரத்துடன்
ஓய்வான வேளையில்
சாந்தியின் வெகுளியுடன்

என் பயத்தின்
மறுவுருவாய் எனக்குள்
மிதந்தது அது

இந்தச் சிங்கத்தைப்
பார்க்கும்போது புரிகிறது.
சிங்கத்தை இதுவரை
பார்த்ததேயில்லை நான் .






-- கவிஞர். அலெக்ஸ்

அலெக்ஸ்

வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

தத்தம் வழியில்
மரணம் நோக்கி
தொடர்கின்றன

ஒரு கைப்பற்றுதலோ
ஒரு முத்தமோ
நிகழ்ந்திருந்தால்
ஒருவேளை
கடல்
அற்றும்
வாழ்ந்திருக்கக்கூடும்

பின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி

உலகெலாம்
உடல்கலாயின

அடைப்புக்குறிகளாய்
ஆடைகள்

முத்தம் தூண்டும்
இதழ்கள்

வழி நெடுகும்
முலைகள்
மெட்டிகள்
மி்கச்சில முகங்கள்

உயிர் கூச
இமைகளை மூடி
கண்களை
புதைக்கிறேன்
நினைவுத்தூண்களில்
கோயில் சிலைகள்
வழிபட யாருமற்று
வளரத்துவங்குகிறது
கடவுளின் அழகியலோடு
லிங்கம் ஒன்று


நீயற்ற பொழுதில்
உலகமெல்லாம்
வெறும்
உடல்கலாயின

என்னால் இயன்றது

நிச்சயமாக சொல்லமுடியும்
தொடரும் செல்(cell) லடி சப்தம்
தாளாது அழும் கைக்குழந்தைக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
எந்த நாடும்
எந்த இயக்கமும்
முக்கியமாக
எந்த மொழியும்


எம் இறையாண்மையை
பாதுகாக்கும் பொருட்டு
என்னால் இயன்றது
இனி இந்த
உறக்கமற்ற இரவில்
பரத்தையின் முலையை
நகங்களால்
காயப்படுத்த மட்டுமே

அலெக்ஸ்

யன்னல்கள்

அம்புலி படர்ந்த சமையல் பாத்திரங்கள்
மின்விசிறி இணைப்பை இரைச்சல்களை நிறுத்தி மென்தென்றல் உலவும் அமைதியை உடுத்தும் இரவு
பனித்த விடியலில் பல்துலக்கியபடி வானம்
ஆடைகள் களைந்து குளிக்கும் அறையில் பழுத்த இலைகளும் வீதியின் மழையும்

திசையெங்கும் யன்னல்கள் வழி
வெளி நிறையும் வீடு

வாழத்தகுந்த இடமாய் நகரம்

அது

அது அப்படித்தான்
இருந்தது

சிந்தாமல்
சிதறாமல்
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நீர் ஊற்றுவது போல

இப்பொழுதும் கூட
மீண்டும் ஒரு முறை
நிரம்பித்
தளும்பியது


குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

பூப்பறித்தல்

எதிர்பார்க்கவேயில்லை
இந்தக்காலைப்பொழுதில்
சற்றுமுன் மலர்ந்த
பூ
பறிக்கபடுமென்று

தவிப்பு

திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்

அவசரமாக

மேகம் சூழ்ந்த மாலையில்
அவசரமாக
வானம் பார்த்தனர்

யாரும் நிற்பதில்லை
நிறுத்தங்களில் கூட
கோடையில் கூட

தூரங்கள்

1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை

2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ

உயிர்த்திருத்தல்

வேர்களை பத்திரப்படுத்தும்
பூந்தொட்டி
மெல்ல தீண்டுகிறது
உதிர்ந்து விழும் மலர்களை

கால் தடங்கள்

பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று

மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு

விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன

கோடைக்கால அந்தி

இறுக்கமான போர்வை
மேலும்
ஈரமான கனவொன்று
வேண்டும்

அல்லது

இந்த மாலையை
எதிர்கொள்ள

ஒரு
ஆழமான
முத்தம் மட்டும்

special Dedication: Mr and Mrs.Ambakur

திருமணம்

ஏறத்தாழ
2532 சட்டங்களின் படி
நான் தண்டனை பெறும் குற்றவாளி
மறைத்தும் தப்பித்தும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்

திருமணத்திற்கு
பிறகு
இன்னும் கூடுதலாக
சில சட்டங்களின் படி

கால பைரவன் கண்சிமிட்டுகிறான்

பெரிதும் நிராகரிக்கபட்டவள்
ஒரு
அடிமையைக் கண்டடைகிறாள்

வேசிகள் என்று
இழிந்து திரிந்தவன்
கண்கள் பனிக்க
குழந்தையைத் தீண்டுகிறான்


காதலிக்கச்சொல்லிக் கெஞ்சியவன்
ஆழ்ந்து உறங்குகிறான்

எல்லோருக்கும்
அண்ணனாக வலம்வந்தவன்
நீலப்படங்களைத் தேடி அலைகிறான்

மென்முலைகள்
பெருத்துப் பாலூட்டி ஆகின்றன

என் இரவுகள்
சில
தினங்களுக்கு முன்
அழகாக இருந்தன


இந்த கவிதை வா.மு கோ.மு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்

கோடை

நெருக்கமான
வெயிலின் கரங்கள்
மூச்சுதிணறும்
முத்தங்கள்
நிரம்பியது

சூரியப்புணர்தலில்
பொதுஇடத்தில்
நிரம்பி வழிகிறது
வியர்வை
எப்படி இருக்க வெட்கப்படாமல்

காற்றுக்கேங்கும்
மனிதப்பார்வையை
அசைந்து அசைந்து
பரிகாசிக்கிறது
ஒரு பசுந்துளிர்
வெளிச்சம் வழிய

(இந்த வலைப்பூவைப்போல)

சற்றே தாமதமாக

1.
சாலைகள் பூக்களாகின
நகரம் தடாகம் ஆனது

காலப்படிகளில்
கண்
இமையைக்
கண்டடைந்தது

இனி எந்த
தூசிக்கு
இங்கு
இடமில்லை


2.
கத்திக்கொண்டிருந்தக்
குழந்தைக்குப்
பால்சோறு

தனிமை
இறந்தகாலம்

தடாகம்
முழுதும் நனைந்திட


நாங்கள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறோம்

ஒரு பறவை ஒரு கிளை

ஒரு கிளையில்
ஒரு பறவை
வந்தஅமர்ந்து
அன்பைப்
பாடுகிறது

பறவை
கூடுகட்டலாம்
இனி
கிளைப்
பறவையாகி
உடன் பறக்கலாம்

சில
உண்மைகள்

பறவை
கிழக்கில் இருந்து
வந்தது

கிளை
கூடுகளற்றது

அன்புற்றிருத்தல்



இந்த மாலைப்பொழுதில்
அழகாகவே இருக்கிறது
சூரியன்
மேகம்
மற்றும் வாழ்க்கை

சொல்ல மறந்துவிட்டேன்
அந்த மீன்கள்
முத்துமிட்டுக்கொண்டன
மணல்வெளி கடலானது

Saturday, 7 April 2012

வெற்றுக்கோப்பை

வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை

------------------------------------------------------------

முடிவிலி - ரெஜோவாசன்

ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்
சுடும் கரை மணல் தொடுகையிலும் …

நிசப்த்தமான தெருக்களில்
நீண்ட தனி நடைகளிலும் …
மழை முடிந்த பின்
ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …

கூட ஒட்டி வரும் தனிமையிலும் …

தேடிப்பார்க்கிறேன்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..

நேற்றைய சந்திப்புகள் வெகுதூரம்
தாண்டிச் சென்றுவிட்டிருக்கின்றன
இன்றுகள் தொடர்ச்சியாக
இணைந்து கொண்டிருக்கின்றன அதே
இரயிலின் கடைசிப் பெட்டிகளாக ...

தவிர்க்க முடிவதில்லை
தென்னங் கீற்றுகளிடை
சிரித்திடும் விண்மினிகளின்
நினைவு படுத்துதலை ...

தனித்துண்ணும் எனை எள்ளும்
முட் கரண்டிகளின்
வளைந்து குத்தும் பரிகாசங்களை ...

வெகுநேரம்
வெறித்துப் பார்க்கப்படும்
புத்தகங்கள் வெறுப்புற்றுக் காற்றுடன்
உரையாடும் சரசரப்பை ...

நடு இரவில்
தன் நிர்வாணம் பார்க்கப்படுவதை விரும்பாமல்
வெளிச்சம் சுருக்கிக் கொள்ளும்
இரவு விளக்கின் பின்
ஒளிந்து கொள்ளப் போகும்
சுவர் பல்லியை ..

தவிர்க்க முடிவதில்லை
மீண்டும் மீண்டும்
சுற்றிச் சுழன்று
மாட்டிக் கொள்கிறேன்
மெல்லினங்கள் ஏற்படுத்தும்
மீள முடியாக் காயங்களில் …

சுழல் மீண்டு வரும் பொழுது
எல்லாம் மறந்து
தேடத் துவங்குவேன் மீண்டும்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..

எல்லாத் தடயங்களையும்
என்னுள் தொலைத்துவிட்டு
இல்லை ..

மறைத்து வைத்த இடம்
மறந்து விட்டு போய் விட்டு


திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சி



கவிதை தனிப்பட்ட முறையில் கருத்தியல் ரீதியாக என்னை மிகவும் பாதித்தது.
அதையும் தாண்டி

//சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு//


ஆத்மநாம் - நகுலன் இவுங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் னு சொன்னா அது சாதாரணம்.
அவுங்களுக்கும் எனக்குமான நெருக்கத்திற்கு வார்த்தைகளே இல்லை ன்னு நினைச்சேன்.
தூக்குல தொங்க போகும் போது முத்தமிடுவது ங்கிறது இருக்கே.அது அதை உணர்த்துது.

ரசிகன்னு சொல்ல முடியாது.
பிடிக்கும் னு சொல்லமுடியாது
காதலன் ன்னும் சொல்ல முடியாது
வெவ்வேறு காலத்தில் இருந்த ஒருத்தனோட ஆத்மார்த்தமான உறவு.
உடலுக்கும் உணர்வுக்குமான நெருக்கம்.

ஒரு வேளை இதுதான் பக்தி இலக்கியத்துக்கெல்லாம் அடிப்படையோ என்னவோ.

நான் உன்னை பார்த்ததில்லை.
தீண்டினதில்லை.
நீ நான் நினைச்ச மாதிரி இருக்கியான்னு இருந்தி்ருப்பியான்னு கூடத் தெரியாது.

உன்னை பற்றிய சில வார்த்தைகள்.அது வழியா உன்னை முதல்ல அணுகுகிறேன்.பிறகு நீ எனக்கு நெருக்கமா அறிமுகமாகிற தருணம்.அதாவது நான் என் உணர்வுகளால உன் உணர்வுகள் (வார்த்தைகள்) வழியா உன்னை நெருங்கும் தருணம். இந்த பிரபஞ்சத்தில் இந்த வெளியில் கறைந்து இருக்கும் உன்னை என் பார்வை கண்டடையும் தருணம்

என்ன சொல்லியும் மனசு நிறையல.
மனதை மொழிபெயர்க்க இன்னும் பழகவேணும்.இன்னும் பயணிக்கனும் மொழியில்.