Monday 13 June 2011

நண்பன்

பள்ளி பருவத்து
நம் முதலாம் வகுப்பில்
வெய்யில் தாகத்தை தணிக்க
தண்ணீர் கேட்டாய் என்னிடம்...

நான் கொடுத்த நீர்
உன் தாகத்தை மட்டும்
தணிக்கவில்லை...
நம்முள் நட்பையும் திணித்தது...

அன்று வேரூன்றிய
நம் நட்பு மரமாய் நம்முள்
வளர்ந்து நிற்கிறது இன்று...

நாம் கவலையின்றி
அரைக்கார் சட்டையுடன்
சுற்றி திரிந்த இடங்களும்...
மிதிவண்டியில் சுற்றிய
வயல் காடுகளும்
திரை அரங்குகளும்
பறை சாற்றுகின்றன
இன்றும் நம் நட்பின் ஆழத்தை...

பள்ளியில் பிரிந்தும்
நம் நட்பு
கல்லூரி காலத்திலும்
நெருக்கமாய் தொடர்ந்தது...
வேலைக்காக இன்று நீ
வெளி நாட்டில் இருந்தும்
குறையவில்லை
நம் நட்பின் ஆழம்...

நீ என்னோடு இல்லாத
இந்த வெற்றிடத்தை
நிரப்ப உன்னையும்
நம் இளைமைக்கால
நினைவுகளையும் தவிர
வேறு எவராலும் முடியாது...

பின்னோக்கி பார்க்கிறேன்
நம் இளமை காலத்தை
ஏக்கத்தோடு...

No comments:

Post a Comment

Thank You...