Wednesday 19 March 2014

வேறுபாடு.


தட்டப்படுகிறது கதவுகள் அல்ல
எனது இதயம்
கைகளால் அல்ல
பெரும் கடப்பாறையினால்.
திறக்கப்பட்டது கதவுகள் அல்ல..
என் இதய நாளங்கள்.
அடிக்கடி நான் இப்படி ஆகிரமிக்கப் படுகிறேன்.
அருகதை அற்ற சில மானிடத்தால்,,
பொறுத்துக் கொள்ள நினைக்கின்ற போதெல்லாம்
வருத்தப்படுகிறது எனது மனது.
ஏன் எனில்
கருத்து வேறுபாடுகளோடு சேர்ந்த கைகலப்பினால்.....
திருத்த முற்படும் போதெல்லாம்
திணறிக் கொள்கின்றேன்
பொருத்தமற்ற போக்குகளினால்......

என் சிந்தனையில் இருந்து சில சிதறல்கள்.


அவளுக்காக.
என் சிந்தனைக்குள் உறையுண்டவளுக்கு............
நேற்றுவரை நான் நினைக்கவில்லை
என்னும் ஒரு நிசப்தம் எனக்குள் என்று.
நின்முகத்தைக் கண்டவுடன்
நினைவிழந்தேன் மறுகணமே.
காதல் இல்லை காமம் இல்லை - என்
கனவிலிலும் நீ இல்லை - ஆனால்
கண் இமைக்கும் பொழுதெல்லாம்
கண்மணியே எனக்குள் நீ.
சிந்தித்துப் பார்க்கின்றேன் சின்னவளே- எப்படி
நீ எனக்குள் என்று?
உன்னைத் தூக்கி எறிவதர்க்காய்
துடித்துக்கொண்டிருந்தவன் நான் - இப்போ
எறிந்து கொண்டிருக்கின்றேன்
ஏதேதோ எல்லாம் உணக்காக.
மீண்டும் எனக்குள் ஓர் வருடல்
அந்த மீறிய காலம் நோக்கி.
காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன் - ஆனால்
அதைச்சற்று தள்ளி வைப்பதர்க்காக - இப்போ
புதுச்சரத்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
இப்படிக்கு உனக்கு.

நிஜங்கள்.

வெறும் கனவுகளுடன் வாழ்ந்து
களைத்து விட்டவன் நான். - எப்படி
நிஜங்களுடன் மீண்டும் நெருங்க முடிகிறது?? சிந்தித்துப்பார்க்கின்றேன்.......
என் சென்ற காலத்தை -இனம்
புரியாத ஓர் ஏமாற்றம் எனக்குள்.
ஏன், எதற்கு , எப்படி என்று- என்னால்
இருந்து விட முடியவில்லை இப்போது.
ஏதோ ஒன்று எனக்குள்
நின்று இம்சை தருகிறது.
உற்று நோக்கினால் ஒன்றும் புரியவில்லை.
இனம் தெரியாத மவுனம்,
காலம் தெரியாத நேரம்,
கணக்கிட முடியாத காலம்,
இவைகளுடன் எப்படி- நான்
இணைந்து கொண்டேன்???
எனக்குத் தான் எத்தனை
சுமைகள், துன்பங்கள் இதற்குள்- எப்படி
என்னால் மீண்டும்- நிஜங்களுடன்
நிற்க முடிகிறது???
சிந்தித்துப் பார்க்க -எனக்குச்
சிரிப்பாக வருகிறது.
ஏனெனில் முன்பு சிரிப்பதற்காகவே
அழுதவன் நான்.

மீண்டும் நிஜங்களுடன் நான்......

உறவு.


என்றும் என் அன்பானவளுக்கு,
உனது அன்பான அந்த வருடல்
என்னை உன்னில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.
எனது மனத்திடையே நீ இப்போ.
எப்படி உன்னால் இது இயன்றது????
காதலைக் கத்தரித்துக் கொண்டவனுக்கு
மீண்டும் ஒரு கலர் கனவு.
சிரித்துக் கொள்கிறேன்....
தெரியவில்லை ஏன் என்று???
சில வேளைகளில் அழுது கொள்கின்றேன்
ஆனால் கண்ணீர் வருவதில்லை.
நினைத்துக்கொள்கின்றேன்
நீ இல்லாத அந்த நிமிடத்தை.
உனது உடல் அழகில் நான் மயங்கவில்லை.
உன் அரவணைப்புக்காய் நான் தவிக்கவில்லை.
காதலித்துக்கொள்
என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.
அப்படியானால்
எப்படி இது சாத்தியமானது????
காதலித்துக் கொள்ளவில்லை.....????
கைகள் பட்டதில்லை.......????
கண்கள் கலக்கவில்லை........????
ஆனால் இது கனவும் இல்லை.
எம்மிடையே என்ன உறவு இது?????

மனம்.

மனிதனிடையே தோன்றும் ஓர் மகத்தான அம்சம் காதல். அந்தக் காதல் சிலவேளைகளில் எம் சிந்தனைகளை சிதறடித்துவிடும். ஏனெனில் மனித மனங்கள் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அங்கலாய்ப்புக்கள் நிறைந்த அசிங்கமான ஒன்று. உணக்கு நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். நீயோ இன்னொருவனுக்கு நானன்று வாழ்ந்து கொண்டிருப்பாய். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எங்கோ முட்டி மோதிக்கொண்டிருப்பேன். நீ கைதட்டி கேலி செய்வாய். ஏனெனில் உனது வாழ்க்கை முறை. சமூக மாற்றம், புதிய சந்திப்புக்கள், என்னில் இருந்து உன்னை எங்கோ இழுத்துச் செல்லும். எனது மனத்திடையே நீ, உணக்கிடையில் நான், என்பதெல்லாம் வெறும் கனவு. ஏனெனில் கால ஓட்டத்தில் குளிப்பவள் நீ.நானோ கடந்து வந்த பாதையை நினைப்பவன். எப்படி எம்மால் இன்னுமொரு புதுப்பிறப்பு?? சிந்திக்கிறேன் சிரிப்புடன் நான்.........

பொய்


புதிய சந்திப்புக்கள்,
புதுமையான மனப்பகிர்வு,
இளமை அனுபவங்கள்,
இன்பக் கைகலப்பு,
காலத்தின் இணைப்பு,
காதலின் சிறப்பு,
இதயத்தின் வருடல்,
இன்பத்தின் வருகை,
தேடலின் முடிவு,
விடியலின் தொடக்கம்,
செப்பனிட்ட நட்பு,
தெவிட்டாத பேச்சு,
நேரத்தின் அழைப்பு,
நின்மதியின் கலைப்பு,
இதுவெல்லாம் என்ன
எம்முடைய இணைப்பு.
சிந்திக்கச் செய்கின்ற,
சின்னம் சிறிய நிமிடம்,
கண்கள் கலந்து கொள்ளும் போதும்
மனங்கள் ஒருமிக்கும் போதும்
நட்பு என்பது நகரத் தொடங்குகிறது.
கடவுளினால் இணைக்கப்பட்டது காதல் ஆகிறது.
காமத்தால் இணைக்கப்பட்டது
வெறும் குளிர் காய்தல் ஆகிறது.
நேற்றைய சந்திப்பு அது இன்றைய காதல்.
நாளை மீண்டும் என்னுமோர் புது நகர்வு.
நானும்+நீயும்=யாரோ ஆனோம்.

வாழ்க்கை.



வாழ்க்கையின் போக்கை என்னால் வரையறுக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடத்தில் அழத்தொடங்கி விடுகிறேன். சிந்த்திக்கத் தொடங்கி விட்டால் திசை மாறிக்கொள்கிறேன்.
இரசிக்கத் தொடங்கிவிட்டால் உணர்ச்சிவசப்படுகிறேன்.
பேசத்தொடங்கி விட்டால் என்னையே மறக்கிறேன்.
வாழ்க்கையின் போக்கில் என்னால் வாழத்தெரியவில்லை.
நேற்று ஓர் நிரந்தர முடிவு. இன்று அது எப்படி அந்தரம் ஆனது???
வாழ்க்கைப் புத்தக வடிவத்தில் எத்தனை வதை பாடுகள்??
பிறப்பை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
ஓர் இறப்புக்காக எமது இயக்கம் என்று.
காதலை எண்ணிக் கவலைப் படுகின்றேன்.
ஏனெனில் பிரிவிற்காக இந்த இன்ப வேதனை என்று.
அன்புக்காக ஏங்கிய பொழுது அரவணைக்கத் தெரியாத உறவுகள்.
எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை????
பூமிச்சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனது வாழ்க்கையும்.
வாழ்க்கைப் பயணத்தில் திசை தெரியாமல் நான்........

கடவுள்.



கடவுளுக்காக நான் கவலைப்படுகின்றேன்.
ஏனெனில் மனிதப் படைப்புக்காய்.
நீ சிந்திக்க முதலே மனிதம் சிஷ்த்தரிக்கப்பட்டது
என்பது உண்மை என்றதை அறிவாய்.
மானிடத்தின் வருகை உணக்கு ஒரு மானக்கேடு.
கடவுள் என்பதர்க்காக நீ கண்ணீர் வடிக்கின்றாய்.
ஏனெனில் அவசரப்பட்டதை அறிய தாமதம் ஆனதர்க்காய்.
உன்னுடைய படைப்புக்குள் ஓரு அர்த்தமற்ற படைப்பு இது.
ஏனெனில் ஏன் இவ்வளவு சுமை, துன்பம், கோபம், கொடூரம்????
இப்படி ஒரு பிறவிக்கு உயிர் கொடுக்க எப்படி உன்னால் இயன்றது???
ஆறு அறிவு என்பது நாய்களுக்கு உண்டு.
ஆனால் மனிதரிடம் நான் கண்டதில்லை.
கடவுள் உண்டு என்று கத்திகொண்டு திரிபவர்களுக்கு
ஓர் மானக் கேடான விடயம் இந்த மானிடப் படைப்பு.

தேவதை மட்டும்


நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்
குடைசாய்கிறது
என் மனசு.

எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்

பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?

குடைக்குள் காளான்


உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

தேவதையின் காடு


விடியாத இரவெல்லாம்
உன் கண்விழியில்
வைத்தாய்

விடிந்த வானம்
தேடும் நிலவாக
என்னை செய்தாய்

மின்சார பூவின் மின்னல்
மனதோடு உரசும் தென்றல்
ஏன் தந்தாய்? நீ ஏன் வந்தாய்?

கனவோடு கண்கள் தொலைத்து
இரவெல்லாம் உன்னை தேடும்
என் தூக்கம்?

மாறன் காண மல்லிகையே
மனதில் தந்தாய் மலையினையே
ஏன் பெண்ணே?

ஓடாத நதிஒன்று
கடல் சேர்ந்த மாயம் என்ன?
தேடாத பொருளொன்று
கைசேர்ந்த அர்த்தம் என்ன?

என்னை சுற்றும் உலகம் மட்டும்
உன்னை சுற்றும் காரணம் என்ன?
கடவுள் காண கண்கள் இன்று
உன்னை கண்டு கடவுளானதென்ன?

நில்லடி!
சொல்லடி! இல்லை
கொல்லடி….

நிலவாக நீ வருவாய் என்று



உனக்கு தெரியாது
என்பதுபோல் என்
காலை உனது கால்
உரசிக்கொண்டு
நாம் பேசியிருக்க


நீலவான வீதியில்
நான் கட்டிய
உனக்கான வீட்டில்
நான் மட்டும் தனியே
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்

நீல வானில் நீ வருகையில்
வின்மீன்கள் குத்தும் என்று
என் கைகள் சிவக்க
அப்புறப்படுத்தி
நீ முத்தமிட்டு
எனை சிவக்க செய்த
அந்த மழைக்கால
உன் கடைசி பிரிதலின்
நினைவுகளின் ஆருதலுடன்


நிலவாக நீ
வருவாய் என்று.

மாலை மழையில்


மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்

மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த

அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…

அதே கண்கள்

சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்
இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்

Monday 10 March 2014

கடவுள் வாழ்க




நீதான்
நீ மட்டும்தான் பே ரழகு
பிறகே சொன்னார்கள்
நீங்கள் ரெட்டைப் பிறவியாமே!
இன்னோர் பேரழகா!
கடவுள் வாழ்க
ஓவியத்தின் நிறைவில் சொக்கி
இன்னொரு பிரதி எடுத்துக்கொண்ட
ஓவியன் போலோ அவன்!
நீயேதான் அவளும்
எனினும்
இன்னோர் உன்னையும்
காண ஆவல்...
ஏன்?
மரகதப்புறா
ஒன்று பார்த்தால் போதாதா?
பிழையாக எண்ணாதே
தாயின்
இருமுலைகளையும்
கேட்டு அழும் பிள்ளை நான்
நான் கண்டதேயில்லை
ஒரே காலத்தில்
இரண்டு வசந்தங்கள்
இரண்டு முழு நிலாக்கள்
ஒரே வானில்
கிழக்கில் பிறந்துகொண்டிருக்கும்
இரண்டு சூரியன்கள்

நான் காணவேண்டும்!