Monday 15 October 2012

கிராமத்தில் காணாமல் போனவை...



6 மணிக்கு முன்பு முழிப்பு
சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்
கலர் கோழிகுஞ்சு
...
...25பைசா இட்லி
50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்
தேன்மிட்டாய்
இலந்தை பழம் ஊறுகாய்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
இரவு நேர தினசரி கபடி
ஐஸ்பைஸ் விளையாட்டு
குச்சி ஐஸ்
இரவு நேர கண்ணாமூச்சி
அஞ்சாங்கல்
பணங்காய் வண்டி
சோளத் தட்டு வண்டி
புல் கோட்டி
கூட்டாஞ்சோறு
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
காரைப்பழம்
பூலாப்பழம்
எலந்தைபழம்
நாகப் பழம்
குருவி முட்டை சுடறது
நண்டு பிடிச்சது
காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
மாட்டு வண்டி பயணங்கள்
வழுக்கு மரம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை...

இவை எல்லாம்.. எதோ 50 , 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல.. 10 , 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமத்து பசங்களின் தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாதவைகளாய் இருந்தவைகள் தான்...

இவற்றில் பெரும்பாலானவற்றை கபளீகரம் செய்த பெருமை செயற்கைகோள் தொலைகாட்சிகளையே .. குறிப்பாக சன் டிவியையே சேரும்...
பெரும் லட்சாதிபதிகளையும் லோட்டீஸ்வரர்களையும் உருவாக்க நினைத்து சிறுவர்களின் நேரத்தை உறிஞ்சும் பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இதன் அழிவில் பங்குண்டு.....

எந்த அறிவியல் வளர்ச்சி இந்த கிராமத்து அடையாளங்களை சுவடுகள் கூட இல்லாமல் ஆக்கியதோ... அதே அறிவியல் வளர்ச்சியை கொண்டே அழிந்து போன அடையாளாங்களை பிரதி எடுத்து வைப்போம்... என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு சந்ததியை எந்திர வாழ்க்கை எரிச்சலூட்டும்.. அப்போது அவர்களுக்கு இவைகள் பயன்படும்...

Thursday 11 October 2012

Kps Alex


உலகில் உள்ள அனைவருமே
நம் நண்பர்கள் தான்
சிலர் அறிமுகமாகி விட்டார்கள்.....
பலர் இன்னும் அறிமுகமாகவில்லை..

கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை அளித்தவர் உத்தமர் கருணாநிதி.

கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகசரியாக மாட்டி விட நினைத்த காகிதபூ நாடக நடிகை ராசாத்தி ( இவரது இயற்பெயர் வேறு), கனிமொழி பிறக்கையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.

குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று.


தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள்.
விடயம் அண்ணாவிற்கு போகிறது.

அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும் ஏமாற்றி , பின்னர் முடியாமல் கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை அளித்தவர் உத்தமர் கருணாநிதி.

பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, " கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன் , அதை செய் " என்பதுவே.

உறுதியாக இருந்த அண்ணாவை , தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.

அப்போது , சொந்த வீட்டில் இருந்த மனோரமாவின் தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி . பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை பதிவு திருமணம் செய்யும் பொழுது , சாட்சி கையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.

வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று. கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தை விட பத்து மடங்கு குறைவு

Hee..he..hee

ஈகோ

ஈகோ என்ற பெயரில் ஒருவரின் அன்பை உதாசீனப்படுத்தினால்,
பின்னொரு நாளில் நீ தேடினாலும் அந்த அன்பு உனக்கு கிடைக்காது.

Tuesday 9 October 2012


உலகத்திலேயே அதிகமாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி)
மேலும் , சீன மொழியானது பல வகைகளாகப் பேசப்பட்டாலும் அம்மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருவம் ஒன்றே !
அதேபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்மொழியும் பல வகைகளாகப் பிரிந்து போனது ,
அதைதான் திராவிட மொழிகள் என்று கூறுவார்கள் ,
திராவிட மொழியானது ஆதியில் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழிகளே ஆகும் ,
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் தமிழும் ஆதி தமிழில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிக் கண்டதே ஆகும் .
ஆதி தமிழ்மொழியில் இர...
ுந்து பிறந்த மொழிகளில் ஒன்றுதான் மலையாளம் ,
மலையாள மொழியை ஆரம்பத்தில் மணிப்பிரவள மொழி என்று அழைத்தனர் ,
மணி என்ற தமிழ் சொல்லும் பிரவளம் என்னும் வடச்சொல்லும் ,
மலையாள மொழி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு மொழி என்று குறிக்கிறது .
உண்மையில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழைத் தான் மலை நாட்டு தமிழ் என்று அழைத்தனர் ,
இம்மொழியானது வடமொழியினால் அதிக அளவு தாக்கப்பட்டு ஒரு தனி மொழியாகத் திரிந்தது ,
ஆய்வுகள் மலையாளத்தில் 80க்கும் அதிகமான சதவீத வடமொழி கலப்பு இருப்பதாகக் கூறுகின்றன .
மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மொழியாக அறிவிக்கப்பட்டது .
கிரந்த எழுத்துகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தன் மொழிக்கு ஓர் எழுத்துவடிவம் உருவாக்கி ,
தமிழில் இருந்து பிரிந்து தற்பொழுது தனி ஒரு மொழியாக மலையாளம் திகழ்கிறது .

அதேபோல தமிழர்களின் வழக்கு தமிழ் (பேச்சுத் தமிழ்) , உரைநடை தமிழுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்ட தனி ஒரு மொழி போலத் தோன்றுகிறது.
எடுத்துகாட்டாக : நா போய்ட்டு வரேன் , நான் போய் வருகிறேன்/நான் சென்று வருகிறேன் .

மேலும் தமிழ்மொழி ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாகப் பேசப்படுகிறது ,
அதுமட்டுமா ? தமிங்கிலம் (Tanglish) தான் தற்பொழுது மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது !
இந்த சூழ்நிலை இப்படியே தொடருமானல் தமிழிலிருந்து மலையாளம் போன்ற மொழிகள் பிரிந்தது போல ,
தமிழிலிருந்து இன்னொரு புது மொழி மீண்டும் பிறந்தாலும் பிறந்து விடும் .
நம் தமிழை நாம் தான் காக்க வேண்டும் ,
வேலியே பயிரை மேய்வது போல ,
நம் தமிழை நாமே சிதைக்கக் கூடாது ,
முடிந்தவரை தமிழை முறையாகப் பேசுவோம் ,
இளமை குன்றாத அழகு தமிழைப் போற்றுவோம் !!

# முடிந்தவரை தமிழை உரோமிய எழுத்துகளில் (Roman Letters) எழுதுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் .

தவறேதும் இருந்தால் திருத்தவும் . நன்றி .

கீழ்காணும் படம் : திராவிட மொழிக் குடும்பம் .
See More


இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லை

இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லை . எந்த கட்சியிலும்(குறிப்பாக ஆண்டு முடித்த கட்சி , ஆட்சியில் இருக்கும் கட்சி ) நீங்கள் கீழ்க்கண்ட பதவிகளிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கண்காணியுங்கள்.

பஞ்சாயத்து தலைவர்
ஒன்றிய கவுன்சிலர்
ஒன்றிய தலைவர்
...
நகராட்சி கவுன்சிலர்
நகராட்சி தலைவர்
மாநகாராட்சி கவுன்சிலர்
மாநகராட்சி தலைவர்
மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
சட்ட மன்ற உறுப்பினர்
பாராளுமன்ற உறுப்பினர்
அனைத்து கட்சி ஒன்றிய , மாவட்ட செயலாளர்கள்

பதவிக்கு வரும் முன் இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பதிந்து கொள்ளுங்கள். பதவியில் இருந்து இறங்குகையில் இவர்களின் சொகுசு வாழ்க்கையை பதியுங்கள்.

கிட்டத்தட்ட மொத்த எண்ணிக்கையில் ஒரு லக்ஷம் பேர்களாக இருக்கும் இந்த அனைவரும் அரசியலை வியாபாரமாக்கி குறைந்தது ஊழல் பணம் பத்து லக்ஷம் முதல் பத்து கோடி வரை பொது மக்களின் பணத்தை தின்கிறார்கள்.

நாம் கத்தி கத்தி நமது நேரத்தை விழுங்கி பலரை திட்டி சாடி கடும் விமர்சனம் வைத்தாலும் இந்த வியாபாரிகள் அனைவரும் அமுக்கடியாக அவர்களது ஊழல் வேலைகளை தொடர்கிறார்கள்.
இவர்களிர்காகவே அரசியல் இயக்கங்களும் இயங்குகிறது. பொது மக்களிற்கு , யானைஇடம் தப்பிய பொறிகளை போல சில பலதுகள் நடக்கிறது.

பொது சொத்தை விழுங்கும், இந்த பெரும் ஊழல் யானைகளை கண்காணிக்க எந்த அமைப்பும் சரியாக இல்லை.

Sunday 7 October 2012

திராவிட மொழிக் குடும்பம் .

உலகத்திலேயே அதிகமாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி)
மேலும் , சீன மொழியானது பல வகைகளாகப் பேசப்பட்டாலும் அம்மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருவம் ஒன்றே !
அதேபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்மொழியும் பல வகைகளாகப் பிரிந்து போனது ,
அதைதான் திராவிட மொழிகள் என்று கூறுவார்கள் ,
திராவிட மொழியானது ஆதியில் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழிகளே ஆகும் ,
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் தமிழும் ஆதி தமிழில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிக் கண்டதே ஆகும் .
ஆதி தமிழ்மொழியில் இர...
ுந்து பிறந்த மொழிகளில் ஒன்றுதான் மலையாளம் ,
மலையாள மொழியை ஆரம்பத்தில் மணிப்பிரவள மொழி என்று அழைத்தனர் ,
மணி என்ற தமிழ் சொல்லும் பிரவளம் என்னும் வடச்சொல்லும் ,
மலையாள மொழி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு மொழி என்று குறிக்கிறது .
உண்மையில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழைத் தான் மலை நாட்டு தமிழ் என்று அழைத்தனர் ,
இம்மொழியானது வடமொழியினால் அதிக அளவு தாக்கப்பட்டு ஒரு தனி மொழியாகத் திரிந்தது ,
ஆய்வுகள் மலையாளத்தில் 80க்கும் அதிகமான சதவீத வடமொழி கலப்பு இருப்பதாகக் கூறுகின்றன .
மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மொழியாக அறிவிக்கப்பட்டது .
கிரந்த எழுத்துகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தன் மொழிக்கு ஓர் எழுத்துவடிவம் உருவாக்கி ,
தமிழில் இருந்து பிரிந்து தற்பொழுது தனி ஒரு மொழியாக மலையாளம் திகழ்கிறது .

அதேபோல தமிழர்களின் வழக்கு தமிழ் (பேச்சுத் தமிழ்) , உரைநடை தமிழுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்ட தனி ஒரு மொழி போலத் தோன்றுகிறது.
எடுத்துகாட்டாக : நா போய்ட்டு வரேன் , நான் போய் வருகிறேன்/நான் சென்று வருகிறேன் .

மேலும் தமிழ்மொழி ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாகப் பேசப்படுகிறது ,
அதுமட்டுமா ? தமிங்கிலம் (Tanglish) தான் தற்பொழுது மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது !
இந்த சூழ்நிலை இப்படியே தொடருமானல் தமிழிலிருந்து மலையாளம் போன்ற மொழிகள் பிரிந்தது போல ,
தமிழிலிருந்து இன்னொரு புது மொழி மீண்டும் பிறந்தாலும் பிறந்து விடும் .
நம் தமிழை நாம் தான் காக்க வேண்டும் ,
வேலியே பயிரை மேய்வது போல ,
நம் தமிழை நாமே சிதைக்கக் கூடாது ,
முடிந்தவரை தமிழை முறையாகப் பேசுவோம் ,
இளமை குன்றாத அழகு தமிழைப் போற்றுவோம் !!

# முடிந்தவரை தமிழை உரோமிய எழுத்துகளில் (Roman Letters) எழுதுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் .

தவறேதும் இருந்தால் திருத்தவும் . நன்றி .

கீழ்காணும் படம் :

தமிழில் எழுதும் வசதி

கைப்பேசி வாங்க வேண்டுமென்றால், அதில் தமிழில் எழுதும் வசதி இருக்கிறதா என்று பார்ப்பவர்கள் மிகச் சிலரே .
கைப்பேசி அழகாய் இருக்கிறதா ? இப்பொழுது இந்தக் கைப்பேசிதான் பிரபலமா ?
கைப்பேசியில் நிறைய புது புது சேவைகள் இருக்கிறதா என்று பார்க்கும் நம் மக்கள் ,
அந்தக் கைப்பேசியில் தமிழ் எழுதி இருக்கிறதா என்று பார்க்கத் தவறிவிடுகின்றனர் .
இதன் விளைவாக அவர்கள் தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதி, தமிழைக் கொல்லாமல் ...
கொன்று புதைக்கின்றனர்.
தமிழைத் தமிழில் எழுதினால்தான் மற்றவர்களுக்கு எளிதில் புரியும்.
ஆங்கிலத்தை ஆங்கில மொழியில் எழுதுங்கள் ,
தமிழைத் தமிழ் மொழியில் எழுதுங்கள் !
கைப்பேசியில் தமிழில் எழுத நிறைய சாதனங்கள் உள்ளன ...
கீழே இணைக்கப்பட்டுள்ள சுட்டிகளைக் காணவும் ,

Download ucweb ( http://wap.ucweb.com/ ) then try Eegarai or Yantram typepads. Key Combinations for them here
In opera Mini or other browsers try TamilTweet typepad . Like TamilTweet, Google's Script Converter ( http://scriptconv.googlelabs.com/?tu&sln=xx&tln=ta ) also can help you to preview your text before tweet it!

Eegarai typepads :- http://tamil.eegarai.info/
Yanthram typepads :- http://m.yanthram.com/ta/type

Key Combinations :- http://tinypaste.com/676ee
http://krupashankar.com/tam/

7. Mobile Applications:
a) iphone/ipod:
i. Sellinam ( http://ziddu.com/download/7610320/UCSCSellinam.rar.html )
ii. Tamil SMS http://itunes.apple.com/us/app/tamil-sms/id391287681?mt=8
iii. iTransliterate http://itunes.apple.com/us/app/itransliterate/id324679389?mt=8

b) Android: Download Tamil Visai Its manual here
Tamil font for android mobiles available here http://www.appbrain.com/app/tamil-visai/com.tamil.visai
https://market.android.com/details?id=com.KM.TK

c) Nokia: Most of Nokia mobiles have Tamil support. If your mobile dont have,try IndiSMS . Download IndiSMS - cNet link or try IndiSMS GetJar link IndiSMS is the good solution for N series mobiles. Panini app working well in nokia mobiles. Download Panini Keypad Else try Tamil SMS If these apps are not helpful, better update your mobile firmware in Nokia Care! Our friend sidhard installed tamil language file in his Nokia c3 mobile. Its free as depends on your warranty!! Just they will refer your IMEI number.
http://getjar.com/mobile/18661/indisms/
http://download.cnet.com/1770-20_4-0.html?query=indi+sms&tag=srch&searchtype=downloads
http://paninikeypad.com/content/downloads.html#Tamil
http://ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/html/howtodownload.html

d) Sony: If Panini .sis file not working in your sony try this Panini Tamil .jar file
Sony Ericsson has tamil language file checkout this ScreenShot Image yellow lined!! Language file here . To install this language file you may need to update your firmware!
By flashing, installing language file you may get Tamil support in your sony mobile! Checkout Omnius-Server . But its tricky! Our Fiend Santhoz Tried this method! Now he has tamil support in his mobile!
http://m.getjar.com/mobile/71451/paninitamil/

இனி வரும் காலங்களில் ஆவது தமிழ் சேவை இருக்கும் கைப்பேசிகளை வாங்குவோம் ,

8. Tamil supported Mobiles:
GPRS:
i. Nokia C3,C5 (Install Language File! Tested!)
ii. Nokia N73(Using IndiSMS, Tested!)
iii. Sony j108i
iv. Nokia 6030

Non-GPRS:
i. Nokia 1650
ii. Nokia 1280
iii. Nokia 5030
iv. Nokia 1616
v. Nokia 2690
vi. Nokia 2700
vii. Nokia 2370
viii. Nokia 5130

More Info :- http://meerantj.blogspot.com/2011/03/blog-post.html?m=1
See More

விக்கிப்பீடியாவில் தமிழ்மொழி கட்டுரைகள்

,
தமிழுக்கு என்று விக்கிப்பீடியா தோற்றுவித்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன ,
இருப்பினும் தமிழ் மொழியில் இதுவரை 40,000 கட்டுரைகளே விக்கிப்பீடியாவில் காணப்படுகிறது ,
இந்திய மொழிகளின் வரிசையில் இந்தி,தெலுங்...
கு,மராத்தி , மணிப்புரி போன்ற மொழிகளுக்கு அடுத்த நிலையில்தான் தமிழ்மொழி உள்ளது ,
தமிழ் வழி தோன்றிய தெலுங்கு மொழிக்கு அடுத்த நிலையில் உள்ளது தமிழின் நிலை ,
இந்த அவல நிலை மாறுவதற்கு நாம்தான் வழி வகுக்க வேண்டும் .
விக்கிப்பீடியா தமிழ் கட்டுரைகள் எழுதும் தமிழார்வாளர்களுக்கு ,
முடிந்தவரை தமிழ் மொழியில் நிறைய கட்டுரைகளை எழுதுங்கள் ,
இணையத்தில் தமிழைப் பரப்புவோம் !!
See More

தமிழ்

தமிழ் பேசினால் மதிப்பு இல்லை என்று கூறித் திரியும் பேரறிவாளிகளே...
வீண் பெருமைக்காக ஆங்கிலத்தில் பேசும் நன்மக்களே,
அரைகுறையாக ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசி தமிழ் மற்றும் ஆங்கிலத்தைக் கொல்லும் மானிடர்களே...

உலகிலேயே தன் மொழியைப் பேச வெட்கப்படும் ஒரே இனம் தமிழினம் தான் என்ற அவலத்தை எம்மினத்திற்குத் தந்து விடாதீர்கள்...

ஆயிரம் மொழி பேசுங்கள், தமிழ் தான் நம் தாய்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்...

உருத்திராட்சம் - ஓர் அறிமுகம்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!, உருத்திராட்சம் என்றவுடன் நமக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது... சன்னியாசம், சாமியார்கள், ஆன்மீகம், எளிமை, ஜபமாலை, உடல்நலம், மருத்துவம், மந்திரவாதிகள் இத்யாதி இத்யாதி!!.

ருத்திராக்‌ஷம், உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும் இந்த உருத்திராட்சம் பற்றி பல்வேறு கருத்தாக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. புராணங்களில் இது பற்றிய மிகைப் படுத்தப் பட்ட பல தகவல்கள் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்து உருத்திராட்சம் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பற்றியும், சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல் பற்றியும் தொகுத்து அளிப்பதே இந்த தொடரின் நோக்கம்.

Wednesday 3 October 2012

என் மனைவியாய் வரப்போகும் தோழியே !




நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு.......... .
இது கவிதை அல்ல....
...நான் கனவுகளால் கோர்த்த மாலை,
என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...
கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை....... .....
உன் சுட்டு விரல் பிடித்து....... ..
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீவாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபையில்
எப்போதும் வைத்திருக்க ஆசை.......
உனக்காக காத்திருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.......
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேக்க ஆசை...........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை...........
அந்த சண்டைக்குள் பின் வரும் சமாதானம் ஆசையோ ஆசை...........
உன் விரல் மல்லிகை பூ தலை சூட ஆசை...........
உன் விழி சொல்லும் கவிதை வாசித்து பார்க்க ஆசை...........
மலை பாம்பாய் நின்கிற தார் சாலையில் உன்னோடு
ஒரு மிதிவண்டி பயணம் போக ஆசை...........
நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை........
பவுர்ணமி இரவில் மொட்டை மாடியில் உன்னோடு நிலா சோறு உண்ண ஆசை........
சின்னஞ்சிறுகதைக ள் பேசி உன் மடியில் குழந்தைபோல துயில ஆசை........
வாழ்கின்றன காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை........
சாகின்ற போது நான் மட்டும் சாக ஆசை.......

                                                                                                                        -அலெக்ஸ்