Thursday 16 August 2012

இப்பதிவை ஷேர் செய்து விடவும் byVasanthakumar Graphicdesigner
சிறுவன் சிவசங்கரன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்:-(((

அன்பு நண்பர்களே சிறுவன் சிவசங்கரன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அடையாறு கேன்சர் மருத்துவமனை மருத்துவர்களே முடியாதென கைவிரித்து வீட்டுக்கு கூட்டி போங்கன்னு சொல்லிட்டாங்க, ஆனால் அந்த சிறுவனின் தாயும் நாமும் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதால் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் இங்
கேயே சிகிச்சை தொடர கயல்விழி மூலம் பிரபல மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருத்துவமனையிலேயே இருக்க சம்மதித்திருக்கிறார்கள் ஆனாலும் குணமடையும் வாய்ப்பு இல்லை என கைவிரித்து விட்டனர், அந்த தாயாரின் கண்ணீர் மிகவும் வேதனை தருகிறது, ஒரே மகனை வைத்திருக்கும் அந்த தாய்க்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லாமல் தவிக்கிறேன்.

யாரேனும் இந்த நோய்க்கு வேறு வகையில் சிகிச்சை அளித்து குணமளிக்க முடியும் என நம்பினால் அந்த சிகிச்சை செய்ய தயாராக இருக்கிறோம். நமது நண்பர்கள் தயவு செய்து இதற்கு மாற்று சிகிச்சை முறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும்.

இப்பதிவை ஷேர் செய்து விடுங்கள், உயிர்காக்கும் சேவையில் பங்கெடுங்கள் நண்பர்களே, இப்பதிவு அந்த தாயின் கண்ணீர் கொண்டு வரையப்படுகிறது..

No comments:

Post a Comment

Thank You...