Monday 15 October 2012

கிராமத்தில் காணாமல் போனவை...



6 மணிக்கு முன்பு முழிப்பு
சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்
கலர் கோழிகுஞ்சு
...
...25பைசா இட்லி
50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்
தேன்மிட்டாய்
இலந்தை பழம் ஊறுகாய்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
இரவு நேர தினசரி கபடி
ஐஸ்பைஸ் விளையாட்டு
குச்சி ஐஸ்
இரவு நேர கண்ணாமூச்சி
அஞ்சாங்கல்
பணங்காய் வண்டி
சோளத் தட்டு வண்டி
புல் கோட்டி
கூட்டாஞ்சோறு
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
காரைப்பழம்
பூலாப்பழம்
எலந்தைபழம்
நாகப் பழம்
குருவி முட்டை சுடறது
நண்டு பிடிச்சது
காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
மாட்டு வண்டி பயணங்கள்
வழுக்கு மரம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை...

இவை எல்லாம்.. எதோ 50 , 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல.. 10 , 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமத்து பசங்களின் தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாதவைகளாய் இருந்தவைகள் தான்...

இவற்றில் பெரும்பாலானவற்றை கபளீகரம் செய்த பெருமை செயற்கைகோள் தொலைகாட்சிகளையே .. குறிப்பாக சன் டிவியையே சேரும்...
பெரும் லட்சாதிபதிகளையும் லோட்டீஸ்வரர்களையும் உருவாக்க நினைத்து சிறுவர்களின் நேரத்தை உறிஞ்சும் பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இதன் அழிவில் பங்குண்டு.....

எந்த அறிவியல் வளர்ச்சி இந்த கிராமத்து அடையாளங்களை சுவடுகள் கூட இல்லாமல் ஆக்கியதோ... அதே அறிவியல் வளர்ச்சியை கொண்டே அழிந்து போன அடையாளாங்களை பிரதி எடுத்து வைப்போம்... என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு சந்ததியை எந்திர வாழ்க்கை எரிச்சலூட்டும்.. அப்போது அவர்களுக்கு இவைகள் பயன்படும்...

No comments:

Post a Comment

Thank You...