Wednesday 3 October 2012

என் மனைவியாய் வரப்போகும் தோழியே !




நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு.......... .
இது கவிதை அல்ல....
...நான் கனவுகளால் கோர்த்த மாலை,
என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...
கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை....... .....
உன் சுட்டு விரல் பிடித்து....... ..
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீவாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபையில்
எப்போதும் வைத்திருக்க ஆசை.......
உனக்காக காத்திருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.......
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேக்க ஆசை...........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை...........
அந்த சண்டைக்குள் பின் வரும் சமாதானம் ஆசையோ ஆசை...........
உன் விரல் மல்லிகை பூ தலை சூட ஆசை...........
உன் விழி சொல்லும் கவிதை வாசித்து பார்க்க ஆசை...........
மலை பாம்பாய் நின்கிற தார் சாலையில் உன்னோடு
ஒரு மிதிவண்டி பயணம் போக ஆசை...........
நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை........
பவுர்ணமி இரவில் மொட்டை மாடியில் உன்னோடு நிலா சோறு உண்ண ஆசை........
சின்னஞ்சிறுகதைக ள் பேசி உன் மடியில் குழந்தைபோல துயில ஆசை........
வாழ்கின்றன காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை........
சாகின்ற போது நான் மட்டும் சாக ஆசை.......

                                                                                                                        -அலெக்ஸ்

No comments:

Post a Comment

Thank You...