Friday 29 June 2012

தமிழை ஓரம் கட்டிய இந்தியும் ஆங்கிலமும்.


தமிழும் ஆங்கிலமும் நமக்கு போதும் என தமிழகத்தில் தீர்மானம் இயற்றி இன்று வரை கடைபிடித்து வருகிறோம். ஆனால் நிலைமை இப்போது கைமீறி போய்விட்டதை பார்க்க முடிகிறது. வட மாநிலத்தவர்கள் அதிகம் பேர் தமிழகத்திற்கு படையெடுத்து வருவதால் கோவை பேருந்தில் தமிழுக்கு இடம் இல்லாது போய்விட்டது . இப்போது இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே தாங்கி பேருந்தில் வழித்தடங்கள் ஒட்டப்பட்டுள்ளன .

இந்தியை தடை செய்ய வேண்டும் எனவும், இந்த செயலை கண்டித்தும் பெரியார் திராவிட கழகம், அரசு உடனே இந்த தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அறிக்கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு அரசு செய்யத் தவறினால் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தில் பெதிக ஈடுபடும் என எச்சரித்து உள்ளனர். நிச்சயம் இந்த போராட்டத்தை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் . கோவை தமிழர்கள் ஒவ்வொரு தனியார் பேருந்து நிறுவனத்தையும் அணுகி அவசியம் கண்டிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கேட்டுக் கொள்கிறது.
ஒளிப்படம் உதவி : தினமணி

No comments:

Post a Comment

Thank You...