Monday 10 March 2014

எஸ்.பி.பி மேல் சத்தியம்

வடக்கிலிருந்து

திரும்பிக்கொண்டிருந்தேன்

எஸ்.பி.பி இந்தியில்

பாடிக்கொண்டிருந்தார்

கர்னாடகாவில் கன்னடத்தில்

ஆந்திராவில் தெலுங்கில்

கேரளாவில் மலையாளத்தில்

உலகம் முழுக்க காற்றலைகளில்

விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்

எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.


சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்

பல பெயர்களின் கும்பலில்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்

ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்தது

தன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்

எனினும் பொறித்தது

எனக்கும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி அல்ல

இது எஸ்.பி.பி யின் மேல் சத்தியம்





பாறையில் ஏன் பெயர்களை எழுதுகிறார்கள்?


நான் ஏன் கவிதைகள் எழுதுகிறேன்?

No comments:

Post a Comment

Thank You...