Wednesday 19 March 2014

வாழ்க்கை.



வாழ்க்கையின் போக்கை என்னால் வரையறுக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடத்தில் அழத்தொடங்கி விடுகிறேன். சிந்த்திக்கத் தொடங்கி விட்டால் திசை மாறிக்கொள்கிறேன்.
இரசிக்கத் தொடங்கிவிட்டால் உணர்ச்சிவசப்படுகிறேன்.
பேசத்தொடங்கி விட்டால் என்னையே மறக்கிறேன்.
வாழ்க்கையின் போக்கில் என்னால் வாழத்தெரியவில்லை.
நேற்று ஓர் நிரந்தர முடிவு. இன்று அது எப்படி அந்தரம் ஆனது???
வாழ்க்கைப் புத்தக வடிவத்தில் எத்தனை வதை பாடுகள்??
பிறப்பை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
ஓர் இறப்புக்காக எமது இயக்கம் என்று.
காதலை எண்ணிக் கவலைப் படுகின்றேன்.
ஏனெனில் பிரிவிற்காக இந்த இன்ப வேதனை என்று.
அன்புக்காக ஏங்கிய பொழுது அரவணைக்கத் தெரியாத உறவுகள்.
எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை????
பூமிச்சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனது வாழ்க்கையும்.
வாழ்க்கைப் பயணத்தில் திசை தெரியாமல் நான்........

No comments:

Post a Comment

Thank You...