Monday 10 March 2014

கடவுள் வாழ்க




நீதான்
நீ மட்டும்தான் பே ரழகு
பிறகே சொன்னார்கள்
நீங்கள் ரெட்டைப் பிறவியாமே!
இன்னோர் பேரழகா!
கடவுள் வாழ்க
ஓவியத்தின் நிறைவில் சொக்கி
இன்னொரு பிரதி எடுத்துக்கொண்ட
ஓவியன் போலோ அவன்!
நீயேதான் அவளும்
எனினும்
இன்னோர் உன்னையும்
காண ஆவல்...
ஏன்?
மரகதப்புறா
ஒன்று பார்த்தால் போதாதா?
பிழையாக எண்ணாதே
தாயின்
இருமுலைகளையும்
கேட்டு அழும் பிள்ளை நான்
நான் கண்டதேயில்லை
ஒரே காலத்தில்
இரண்டு வசந்தங்கள்
இரண்டு முழு நிலாக்கள்
ஒரே வானில்
கிழக்கில் பிறந்துகொண்டிருக்கும்
இரண்டு சூரியன்கள்

நான் காணவேண்டும்!

No comments:

Post a Comment

Thank You...