Wednesday 19 March 2014

வேறுபாடு.


தட்டப்படுகிறது கதவுகள் அல்ல
எனது இதயம்
கைகளால் அல்ல
பெரும் கடப்பாறையினால்.
திறக்கப்பட்டது கதவுகள் அல்ல..
என் இதய நாளங்கள்.
அடிக்கடி நான் இப்படி ஆகிரமிக்கப் படுகிறேன்.
அருகதை அற்ற சில மானிடத்தால்,,
பொறுத்துக் கொள்ள நினைக்கின்ற போதெல்லாம்
வருத்தப்படுகிறது எனது மனது.
ஏன் எனில்
கருத்து வேறுபாடுகளோடு சேர்ந்த கைகலப்பினால்.....
திருத்த முற்படும் போதெல்லாம்
திணறிக் கொள்கின்றேன்
பொருத்தமற்ற போக்குகளினால்......

No comments:

Post a Comment

Thank You...