Monday 10 March 2014

நாகரிகமில்லாத மைசூர்பா


மாலை வேளைகளில்

ஷூக்களையும்,சீருடைகளையும் எறிந்துவிட்டு

மடித்துக்கட்டிய லுங்கியோடு ஊர் சுற்றி

பீடி வலித்துக்கொண்டு

டாஸ்மாக் சென்றுவரும்

வேடியப்பன்

கேண்டீனில் மைசூர்பா-வை கையிலேயே வாங்கி

நடந்துகொண்டே

அப்படியே கடித்துத் தின்கிறார்

இருப்பதிலேயே

சுவைமிகுந்த அந்த மைசூர்பா-வை

நமது நாற்காலி மேசைகளிலமர்ந்து

எச்சில் ஊற நாம்

பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்

No comments:

Post a Comment

Thank You...