Wednesday 19 March 2014

என் சிந்தனையில் இருந்து சில சிதறல்கள்.


அவளுக்காக.
என் சிந்தனைக்குள் உறையுண்டவளுக்கு............
நேற்றுவரை நான் நினைக்கவில்லை
என்னும் ஒரு நிசப்தம் எனக்குள் என்று.
நின்முகத்தைக் கண்டவுடன்
நினைவிழந்தேன் மறுகணமே.
காதல் இல்லை காமம் இல்லை - என்
கனவிலிலும் நீ இல்லை - ஆனால்
கண் இமைக்கும் பொழுதெல்லாம்
கண்மணியே எனக்குள் நீ.
சிந்தித்துப் பார்க்கின்றேன் சின்னவளே- எப்படி
நீ எனக்குள் என்று?
உன்னைத் தூக்கி எறிவதர்க்காய்
துடித்துக்கொண்டிருந்தவன் நான் - இப்போ
எறிந்து கொண்டிருக்கின்றேன்
ஏதேதோ எல்லாம் உணக்காக.
மீண்டும் எனக்குள் ஓர் வருடல்
அந்த மீறிய காலம் நோக்கி.
காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன் - ஆனால்
அதைச்சற்று தள்ளி வைப்பதர்க்காக - இப்போ
புதுச்சரத்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
இப்படிக்கு உனக்கு.

4 comments:

Thank You...