Wednesday 19 March 2014

நிஜங்கள்.

வெறும் கனவுகளுடன் வாழ்ந்து
களைத்து விட்டவன் நான். - எப்படி
நிஜங்களுடன் மீண்டும் நெருங்க முடிகிறது?? சிந்தித்துப்பார்க்கின்றேன்.......
என் சென்ற காலத்தை -இனம்
புரியாத ஓர் ஏமாற்றம் எனக்குள்.
ஏன், எதற்கு , எப்படி என்று- என்னால்
இருந்து விட முடியவில்லை இப்போது.
ஏதோ ஒன்று எனக்குள்
நின்று இம்சை தருகிறது.
உற்று நோக்கினால் ஒன்றும் புரியவில்லை.
இனம் தெரியாத மவுனம்,
காலம் தெரியாத நேரம்,
கணக்கிட முடியாத காலம்,
இவைகளுடன் எப்படி- நான்
இணைந்து கொண்டேன்???
எனக்குத் தான் எத்தனை
சுமைகள், துன்பங்கள் இதற்குள்- எப்படி
என்னால் மீண்டும்- நிஜங்களுடன்
நிற்க முடிகிறது???
சிந்தித்துப் பார்க்க -எனக்குச்
சிரிப்பாக வருகிறது.
ஏனெனில் முன்பு சிரிப்பதற்காகவே
அழுதவன் நான்.

மீண்டும் நிஜங்களுடன் நான்......

No comments:

Post a Comment

Thank You...