Sunday 9 September 2012

அண்ணா நினைவு வளைவை , முதலிலேயே இடிக்காமல் திட்டம் தயார் செய்து இருக்கலாம் - இது திமுக கருணாநிதி அரசு செய்யாதது.

சரி அப்படியே அதை இடித்து திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இருந்தாலும் , அதை கடைசி நேரத்தில், அரைகுறையாக இடித்த பின்னர் , திட்டம் வேறுபாதையில் செல்கிறது என்று இப்போது பாதையை மாற்றுவது - அதிமுக ஜெயலலிதா அரசின் வீண் வெட்டி வேலை.

இதில் அரசியல் அறிக்கை விடும் இருவரும் , அதிமுகவும்- திமுகவும் , ஐந்து பைசா பிரயோசனம் இல்லாத வெட்டி வேலைகளை மட்டும் செய்ய கூடிய அமைப்புகள் என்பது மட்டும் தெளிவு.

இந்த இரு அமைப்புகளையும் , அவர்களின் ஆளுமையின் கீழ் பணியாற்றும் முழு ஊழல் மற்றும் முட்டாள் அரசாங்க ஊழியர்களை வைத்து கொண்டு , ஒரு நகர்வு கூட தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்ல இயலாது. இது உறுதி .

மாற்றம் வேண்டும் .

No comments:

Post a Comment

Thank You...