Sunday 9 September 2012

அதியமான்
ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய
காட்சியைக் காட்டும் தற்காலச் சிலை

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச்
சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள்
இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய
குறிப்புக்கள் காணப்படுகின்றன.

புறநானூறு, அகநானூறு,
குறுந்தொகை, பதிற்றுப்பத்து,
சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய
குறிப்புக்கள் வருகின்றன.
ஔவையார், அஞ்சியத்தை மகள்
நாகையார், பரணர்,
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார்,
பெருஞ்சித்திரனார், மாமூலனார்
ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப்
பற்றிய தகவல்கள் உள்ளன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும்
ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.

திண்மையான
உடல்வலி பொருந்தியவன் என்றும்;
சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட
ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள்
இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர்.

இவனது அரண்மனை
இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள்
மழையைப் போல் ஈயும்
தன்மையது என்றும் பாடல்கள்
அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான்
உண்ணாது ஔவையாருக்குக்
கொடுத்தான் என்றும்
அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.

No comments:

Post a Comment

Thank You...