Thursday 24 May 2012

கொலைகாரர்கள் உருவாவது எப்படி??????


கொசுத்தொல்லை தாங்க முடியாம இருந்த ஒருத்தரு எல்லா வழியிலயும் முயற்சி பண்ணி, மனுஷன் நிம்மதியா தூங்க ஒரு வழி கிடைக்குமான்னு இருந்த சமயத்துல, ஒரு விளம்பரத்தை பார்த்திருக்காரு. கொசுவை கொல்ல சுலப வழி,,,, 100 ரூபாய் அனுப்புங்கள். நாங்கள் உங்கள் வீட்டுக்கு உபகரணங்களையும் மற்றும் செய்முறை விளக்க புத்தகத்தையும் தபாலில் அனுப்புகிறோம். 100 ரூபாய் அனுப்பிவிட்டு, மனுஷன் வெயிட்டிங்ல இருந்திருக்காரு….., அந்த பார்சலும் வந்துச்சு. பிரிச்சுப் பார்த்தா, ஒரு ரெண்டங்குல கனத்துல மரக்கட்டை ஒண்ணு, ஒரு ஆணி, அப்புறம் ஒரு சுத்தியல். மனுஷனுக்கு ஒண்ணும் புரியாம செய்முறை விளக்கப் புத்தகம் எங்கடான்னு தேடுனா, ஒரு வெள்ளைப் பேப்பர்ல கையால் எழுதியிருந்துச்சாம்.

மரக் கட்டையை மேடுபள்ளமில்லாத சம தளத்தில் வைக்கவும்.

உங்களுக்கு வலது புறத்தில் சுத்தியலையும் இடது புறத்தில் ஆணியையும் வைக்கவும்.

ஒரு கொசுவை பிடித்து அந்த மரக் கட்டையின் மீது வைத்து விட்டு, பறந்து விடாமலிருக்க அதன் கால்களை உங்கள் வலது கை விரல்களால் அழுத்திக் கொள்ளவும்.

இப்பொழுது இடது கையால் ஆணியை எடுத்து சரியாக கொசுவின் தலைமீது வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.

இப்பொழுது மெதுவே உங்கள் வலது கையை கொசுவின் கால்களிலிருந்து விடுவித்து, சுத்தியலை எடுத்து, ஆணியின் மீது மெதுவே ஒரு தட்டு தட்டுங்கள்.

ஆணி கொசுவின் தலையில் ஆழமாக இறங்கி, கொசு இறந்து போயிருக்கும்.

இந்த உபகரணம் ஆபத்தான ரசாயன புகை எழுப்பும் மற்ற உபகரணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த உபகரணத்தை கண்டு பிடித்தவனை கணக்கு தீர்க்க ஒரு கொலைகாரன் ரெடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சும்மா தட்டுல போட்டு வெச்சா அதை அப்பிடியே சாப்டறது தானா, எப்படி இருக்கு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?

ம்.., நல்லாருக்கு.

இந்த ஒரு வார்த்தைதானா, இந்த கேரட் அல்வா கிண்டும்போது கொஞ்சம் நெய் ஊத்தலாம்னு நெனச்சு, நெய் டப்பாவைத் திறந்தா முழுசும் காலியாயிருக்கு, அப்பத்தான் புரிஞ்சுது இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல நெய் வாங்க சொல்லியிருந்தும் நீங்க மறந்துட்டு வந்தது, சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு நெனச்சு நானும் மறந்துட்டேன். உடனே அடுப்புல இருக்கற கேரட்டை எடுத்து கீழ வெச்சுட்டு, பக்கத்து கடையில போயி கொஞ்சமா நெய் வாங்கிட்டு வந்தேன். ஆனா அதுக்குள்ள சூடான சட்டியில இருந்ததுனால கேரட் கருகிடுச்சோன்னு ஒரு பயம் வந்துருச்சு. அப்பிடி ஏதும் இல்லதான?

ஓஹோ, அதான் கொஞ்சம் தீஞ்ச வாசனை வருதோ?

ஆமா, ஒருத்தி இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்காக இத செஞ்சு வெச்சுருக்காளே, பேசாம சாப்புடுவோம்னு எப்பவுமே தோணாதே, எதைச் செஞ்சாலும் அதுல இது நொட்டை, அது நொள்ளைன்னு சொல்லலைன்னா, அது வயித்துள்ளயே இறங்காதே, எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்பிடி, யாரைச்சொல்லி என்ன பண்றது… @#$%^&*!, @#$%%^^&&*

அந்த கல்யாண புரோக்கரை கொல்ல ஒரு கொலைகாரன் ரெடி……

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியா வழவழன்னு ஆறு பக்கத்துக்கு ஒரு ரிப்போர்ட் போடுவாங்க, “கண்டேன் சீதையை” ங்கற மாதிரி கச்சிதமா, சுருக்கி எழுதி கொண்டு வாப்பா,

ஆறு பக்க ரிப்போர்ட், ரெண்டு பக்கமானவுடன்,

“ஏம்ப்பா, வெச்சா குடுமி, செரச்சா மொட்டைன்னுதான் வேலை செய்வீங்களா, கொஞ்சம் சின்னது பண்ணுன்னா, உடனே எல்லாத்தயும் தூக்கீடுவயா, எதெது வேணுமோ அதெல்லாம் கண்டிப்பா இருக்கணும்பா, ரிப்போர்ட் எவ்வளவு பெருசானாலும் பரவால்ல, ஆரம்பத்துல இருந்து எல்லா டீடெய்லயும் எழுதி கொண்டுவா”

ரெண்டு பக்க ரிப்போர்ட் இப்பொழுது எட்டு பக்கமானவுடன்,

“எனக்கு இருக்கற டென்ஷன்ல, ஏம்ப்பா இப்படி படுத்தறீங்க, உனக்கு ரிப்போர்ட் எழுத சொல்லிக் குடுக்கறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளீரும்னு நெனைக்கறேன். ஆமா, நீ காலைல இருந்து எந்த ரிப்போர்டை கொண்டு வந்து காமிச்சுகிட்டு இருக்கே, நான் இதையவா சொன்னேன். மார்ச்சு மாசம் 30ம் தேதி ஆச்சு, இன்வாயஸ் டீடெய்ல் எல்லாம் இருக்குமே,,,, அதை எடுத்துட்டு………….!!!!!!!#######

இவனை பாஸ் ஆகும்படி புரமோஷன் கொடுத்தவனை கொலை பண்ண ஒரு கொலைகாரன் ரெடி…….

No comments:

Post a Comment

Thank You...