Thursday 24 May 2012

பரிணாமம், இந்துமதம், அலெக்ஸ்



அருமை நண்பர் பதிவர் சிறில் அலெக்ஸ் பதிவு ஒன்றில் இந்துமதம் பரிணாமம் குறித்து என்ன சொல்கிறது என்று கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் சொல்வது சிரமம். முதலில் இந்து மதம் ஒரே கொள்கை உடையதா ? என்று பார்க்கவேண்டும்.

இந்து மதம் ஒரே கொள்கை உடையது அல்ல. பாரதத்தில் வழங்கி வந்த பல சமயங்களை 18 நூற்றாண்டுவரை இந்துமதம் உள்வாங்கி வந்திருக்கிறது. அதற்கு முன்பு தனி மதமாக அடையாளம் காணப்படவில்லை. சனாதன தர்மம், சைவம், வைணவம், வேத மதம் போன்ற தனித் தனி சமயங்களாக இருந்து வந்தது அதுபோல் காலத்தின் கட்டாயத்தின் பேரில் புத்தமதக் கொள்கைகள் எதிர்க்கும் பலி இடுதல் போன்றவற்றையும் உள்வாங்கிக் கொண்டது. ஆங்கிலேயர்கள், மற்றும் முகலாயர் மன்னர்கள் மூலமாக பின்னாளில் இந்துமதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

எனவே ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பொதுவான வேத நூல்கள் இல்லை ! பகவத்கீதையை சைவர்கள் உயர்ந்த வேதமாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்துமதத்திற்கான வேதப் புத்தகம் கீதை என்று நீதிமன்றங்களில் பயன்படுத்தும் அளவுக்கு தான் பகவத் கீதை பொதுவானதாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய இந்துக்கள் பகவத் கீதையை வெறுக்கவே செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. புத்த மதத்திலும் ஹீனயானம் மகாயானம் என்ற இருபிரிவுகள் உண்டு.

எனவே இதுதான் பரிணாமத்தைப் பற்றி இந்து மதம் சொல்கிறது என்று எவரேனும் காட்டினால், இந்து மதத்தை சேர்ந்தவர்களே அதை மறுப்பார்கள். பிற்போக்கான மதப்பற்றாளர்கள் மட்டும் இந்து மதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று இந்துமதம் சொல்வதுதான் சரி என்று சொல்வார்கள். பெரும்பாலோனர் இந்து மதத்தில் பின்பற்றுவது குல தெய்வவழிபாடே. பகவத் கீதையையோ, சைவ சித்தாந்தங்களையோ, வேறு எதையோ யாரும் அளவுகோலாக எடுத்துக் கொண்டு மதத்தை பின்பற்றுவதில்லை.


பொதுவாக பெருவாரியான இந்துக்கள் சொல்வது கலியுக முடிவில் கல்கி அவதாரம் வரும். அத்துடன் உலகம் முடிவுக்கு வருவதில்லை. புதிய உலகம் பிறக்கும். அது சொர்க்கம் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லை. அது ஒரு பிரளையம் என்கிறார்கள் திரும்பவம் சத்திய (தங்கம்) யுகம், திரேத(வெள்ளி) யுகம், துவாபர (செம்பு) யுகம், கலி (இரும்பு)யுகம் என தொடங்கும், மறுபடியும் பிரளயம். உலகம் கெட்டுப் போகும் போது அதாவது கலியுகத்தில் கல்கி அவதாரம் வருமாம். அதைத் தான் சம்பவாமி யுகே யுகே ! யுகங்கள் தோறும் நான் பிறக்கிறேன் என்று கிருஷ்னர் பகவத் கீதையில் சொல்வதாக சொல்கிறார்கள். சிருஷ்டி இல்லை , படைப்பு இல்லை, பிரளயம் மட்டுமே நடக்கிறது என்பது தான் இதன் பொருள். இதில் பரிணாமம் இல்லை.


பரிணாமம் பற்றி சொல்லாமல் பிரபஞ்சம் பற்றி தமிழ் சித்தர்கள் சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று அனுக்கொள்கை, வான சாஸ்திரம் போன்ற வற்றை அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்.


திருவள்ளுவரும் சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்க்றார்.

எங்கும் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று சொல்லவில்லை. வேதங்களில் மட்டுமே பிரம்மனிடமிருந்து மனிதன் தோற்றுவிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது சித்தர்கள் வாக்கிலிருந்து சிலவற்றை எடுத்து எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

Thank You...