Thursday 24 May 2012

இருள் !





ஏதுமற்ற இருண்ட வானத்தை
ஒரு நாள் அண்ணாந்து பார்த்து,
இவ்வளவு பெரிய வானமாக இருந்தும்,
எல்லாம் சூனியமே என்று நினைத்தபோது
என் நீண்ட நினைவை கலைப்பது போல்
தோன்றியது அங்கே பிறைநிலவு !

நம்பிக்கை இன்மைக்கு என்ற கார்
இருளுக்குப் பின் எப்போதும்
இரவில் ஒரு அமாவாசை நிலவு போல
நம்பிக்கை மறைந்துதான் இருக்கிறது.

நம்மை சூழ்ந்த இருள் என்பது
ஒரு தற்காலிகம் என்று நம்பிக்கை வைத்து
உணர்ந்து கொள்ளும் போது
பிறை நிலாவாய் நம்பிக்கை
துளிர்விட்டு நம்பிக்கை
ஒளி வளர்ந்து பரவுகிறது !

No comments:

Post a Comment

Thank You...