Thursday 24 May 2012

கடிதம்


 
நீல நிற காகிதமொன்றில்
தன் உள்ளத்தில் உள்ள
அன்பு வார்த்தைகளை கொட்டி
உறவுகளுக்கும்
நண்பர்களுக்கும்
அன்புள்ள என்று ஆரம்பித்து
அன்புடன் என்று முடிக்கும்
கடிதம் மிக அழகு....

அழகிய கிறுக்கலான
கை எழுத்துடன் தன்
கைப்பட எழுதும் கடிதம்
உணர்வுகளின் வெளிப்பாடு....

அன்பு அம்மாவிற்கும்
காதல் மனைவிக்கும்
பாசத் தங்கைக்கும்
உயிர் நண்பர்களுக்கும்
உறவுகளுக்கும்
எழுதும் கடிதம்
அன்பின் வெளிப்பாடு....

நவீன உலகில்
மனித இயந்திர
வாழ்க்கையில் கடிதம்
மறந்து மின்னஞ்சலாகிவிட்டன....

தொலைந்தது கடிதம்
மட்டுமல்ல
மனித உறவுகளுக்கு
இடையே உண்டான
அன்பும் பாசமும் தான்....

No comments:

Post a Comment

Thank You...