Thursday 24 May 2012

உடல் உறுப்புகள் புனிதம் அடையுமா ?


வயிற்கு உணவில்லை என்றால்
ஜெகத்தினை அழித்திட
துணியாமல்,
உதிரத்தை விற்ற உழவன்
ஒருவனின் உதிரம் புனிதம்
அடைந்தது !

ம்...
உதிரம் சென்றது உயர்ந்தவர்
உடலுக்குள் ஆயிற்றே !

மாநகர தொழிலாளி
மானத்துடன் வாழ்வதற்கு
அவனிடம் இருந்த
மற்றொரு கிட்னியை
மகிழ்வுடன் விற்றான் !
அதே கிட்னி, சேர்ந்த இடம்
உயர்ந்தவரிடம்,
உயர்ந்தவர் சிறுநீரையும்
நன்றாகவே சுத்தம் செய்கிறதாம் !

No comments:

Post a Comment

Thank You...